By என். ராமதுரைDINAMANI.COM
கூடங்குளம் அணுமின்சார நிலையம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின்
பின்னணியில் பலரும் தெரிவித்த ஒரு யோசனை பெரிய அளவில் சூரிய மின்சாரத்தின் பக்கம்
திரும்பலாமே என்பதுதான். சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும்.
இது நன்கு நிரூபணமான ஒன்று. இதைத்தான் சூரிய மின்சாரம் என்கிறார்கள். சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது
என்பது ஏதோ இப்போது தோன்றியது அல்ல. 1958}ஆம் ஆண்டில்
பூமியைச் சுற்றும் வகையில் பறக்கவிடப்பட்ட வான்கார்ட் என்ற அமெரிக்க
செயற்கைக்கோளில்தான் சூரிய மின்பலகை முதல் தடவையாகப் பயன்படுத்தப்பட்டது.