சனி, 22 டிசம்பர், 2012

மின்சாரம் – ஒரு கண்ணோட்டம்!


நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.. என்னைப் பொருத்தவரை கடந்த இருபது ஆண்டுகள் ஆட்சியில் மாறி மாறி இருந்த இரண்டு அரசுகளும் இதற்குப் பொறுப்பாகும். இந்தியாவின் மற்றும் தமிழ்நாட்டின் மக்கள் தொகை பெருகும் விகிதம் தெரியும், நாட்டின் முன்னேற்ற விகிதம் எவ்வளவு இருக்கும் என்று ஊகித்து இருப்பார்கள். வருடத்திற்கு எவ்வளவு மின் தேவை அதிகரிக்கும் என்று தெரிந்திருக்கும். பராமரிக்காவிட்டால் எவ்வளவு இழப்பு என்றும் தெரிந்திருக்கும்.. இவ்வளவு தெரிந்திருந்தும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டாதது ஏன்..?? தொலைநோக்குத் திட்டத்தில் பணத்தை முடக்கினாலும், இந்த சனங்களுக்கு அது புரியாது. குறுகிய கால இடைவெளியில் கிடைக்கும் நன்மைகளையே நாம் விரும்புகிறோம், அதையும் இந்த அரசியல் வாதிகள் நன்கு அறிந்து வைத்து உள்ளனர். தேர்தல் அன்பளிப்புகள், இலவசங்கள், தேர்தலுக்கு முன்னால் போடப்படும் சாலைகள், இவை எல்லாம் நான் சொன்ன கருத்தையே ஆணித்தரமாய் பிரதிபலிக்கின்றன.

மற்றுமொரு முக்கிய விஷயம். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டுக்குப் போதுமானதே. ஆனால் எப்படி இந்தப் பற்றாக்குறை..??

1. ஓரிடத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், வெகு தூரத்தில் இருக்கும் மற்றொரு இடத்திற்குக் கம்பிகள் மூலம் கடத்தப் படுகின்றன. இதனால் ஏற்படும் மின் இழப்பு மட்டும் முப்பது சதவிகிதத்திற்கும் மேல் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் ஓட்டைப் பானையில் மோர் சுமந்து செல்வதைப் போலத்தான். இது போக மின்னழுத்த மாற்றிகளில் (Step down and step up transformer stations)ஏற்படும் மின்னிழப்புகள், மற்றும் சரி வர பராமரிக்கப் படாத மின்னாலைகளில் ஏற்படும் இழப்புகள் மற்றும் இதர கசமுசா இழப்புகளையும் கருத்தில் கொண்டால், நாம் (உண்மையாக)தயாரிக்கும் மின்சாரத்தில் பாதி கூட பயனாளர்களைச் சென்றடைவதில்லை.

2. இந்தியாவில் மின் திருட்டு என்பது பல இடங்களில் அரசாங்கத்தின் துணையோடும், மற்றும் பல இடங்களில் கண்டு கொள்ளப் படாமலும் அரசியல்வாதிகளின் தலையீட்டோடும் அமோகமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட, பல அரசியல் வாதிகள் மற்றும் பெரும்புள்ளிகளின் ஆலைகள் திருட்டு மின்சாரத்திலேயே ஓடுகின்றனவாம்.

3. இந்தியாவில் மட்டும் மாதத்திற்கு மூவாயிரம் தொலைத்தொடர்புக் கோபுரங்கள் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசு தொலைதொடர்பு நிறுவனங்களால் நிறுவப் படுகின்றன. நாட்டில் டெலிகம்யூனிகேஷன் எனப்படும் தொலைதொடர்புப் பயனாளர்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், அவர்கள் அனைவருக்கும் சேவை அளிக்க வேண்டியது கட்டாயமாகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், இதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதும் இதற்குக் காரணம். ஒவ்வொரு தொலைத்தொடர்பு கோபுரத்திற்கும் மூன்றிலிருந்து நான்கு கிலோவாட் மின் இணைப்பு தேவைப்படுகிறது. கொஞ்சம் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். வெறும் மின் கோபுரத்திற்கு மட்டும் இவ்வளவு மின் தேவை என்றால், தமிழகத்தில் நாள் தோறும் எத்தனை பள்ளிகள், கல்லூரிகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், தனி வீடுகள் கட்டப் படுகின்றன.. அனைத்திற்கும் மின் இணைப்புத் தர வேண்டுமே கொஞ்சம் யோசியுங்கள்.. தலை சுற்றுகிறதா…???

4. நம்மிடம் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு அந்த அளவுக்கு இல்லை.

5. மின்சாரம் என்றால் அது வெகு தொலைவில் இருந்து தயாரிக்கப்பட்டு எங்கிருந்தோ நமக்கு வந்து விடுகிறது. இதில் நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் உள்ளது.

சரி.. மேற்கூறிய புகார்களுக்கு இனி நாம் என்னென்ன செய்யலாம்..

நாம் எப்போதும் கூறுவது போல, மாற்றங்கள் நம்முள் இருந்து தொடங்க வேண்டும்.
வீட்டில் இருக்கும்போதும், அலுவலகத்தில் பணிபுரியும்போதும் தேவையில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சாதனங்களை நிறுத்தும் பழக்கத்தை நமக்குள் ஏற்படுத்த வேண்டும். என் உடன் பணி புரியும் நண்பன், அலுவலக வளாகத்தில் என்னுடன் பேசிக்கொண்டே நடந்து வருவான்.. சட்டென்று உபயோகப்படாத அறைகளை எட்டிப் பார்த்து மின்விளக்குகளை அணைத்து விடுவான். வளாகத்திலும், தேவைக்கு அதிகமாக இயங்கும் மின் விளக்குகளை அணைத்துக் கொண்டே நடப்பான். நிறுவனம் தானே பணம் கட்டுகிறது நமக்கென்ன என்று அவன் போகவில்லை. மின்சாரம் நமது சொத்து. பல்லாயிரக்கான ரூபாய்கள் பணம், பலரது உழைப்பினால் அது உங்கள் கைக்கு வருகிறது என்ற எண்ணம் நமக்குள் வளர வேண்டும், அடுத்த சந்ததிகளுக்கும், இதன் தேவையைச் சொல்லிப் புரிய வைத்து வளர்த்த வேண்டும்.

கேப்டிவ் பவர் பிளாண்ட் என்று ஒன்றைச் சொல்வார்கள். அதாவது ஓரிடத்தில் தயாரிக்கப் படும் மின்சாரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உபயோகப்படும் விதத்தில் மின் நிலையங்களை வடிவமைத்தல். அதாவது பெரிதாக ஒன்றை ஓரிடத்தில் கட்டி, மின்சாரத்தைக் கம்பிகள் மூலம் கடத்துவதற்குப் பதிலாக, சிறு சிறு மின் உற்பத்தி நிலையங்களை ஆங்காங்கே தேவைக்கேற்ப அமைத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுதல். இதன் மூலம் ட்ரான்ஸ்மிஷன் லோசெஸ் என்றழைக்கப்படும் நீண்டதூர கம்பிக்கடத்திகளினால் ஏற்படும் இழப்பைக் கணிசமாகக் குறைக்கலாம்.

மின் திருட்டை ஒழிக்க அரசு தான் ஏதேனும் செய்ய வேண்டும்.

தொலைதொடர்பு கோபுரங்கள் அனைத்தும் டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப் பட்டு உள்ளன. மின் இணைப்பு இல்லாத நேரத்திலும் அது இயங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வடிவமைப்பு உருவாக்கப் பட்டது. மின் இணைப்பே இல்லாத பல ஊர்களிலும், தொலைத்தொடர்பு கோபுரங்கள் முழு நேர டீசல் ஜெனரேட்டர்களால் மின் உற்பத்தி செய்து இயக்கப் படுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால் பலகோடிகளில் புழங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த டீசலுக்கு அரசிடம் இருந்து மானியம் பெறுவது தான். இவர்களுக்கு எதற்கு மானியம்..?? (ஏண்டா நாட்டுல எவ்வளவு பிரச்சினை இருக்கு.. இவங்க என்ன பொழைக்க வழியில்லாம நடுத்தெருவுல நிக்கிறாங்களா…??? ) இன்னும் கொடுமை என்னவென்றால் இவ்வாறு மானியத்துடன் வழங்கப்படும் டீசலை முறைகேடாக (தெரிந்த விஷயம் தானே..) பலர் உபயோகிக்கிறார்கள்.. பகல் கொள்ளை போல.. எப்படி ரேஷனில் ஊற்றப் படும் மானிய மண்ணெண்ணெய் வெளியில் விற்கப் படுகிறதோ, அதே போலத்தான். இது சின்ன விஷயம் இல்ல.. இந்த முறைகேடுகளால் பலகோடிகள்(கிட்டத்தட்ட முப்பது கோடிக்கும் மேல்) வருடத்திற்கு இழப்பு ஏற்படுகிறதாம்.. நம்ப முடிகிறதா..?? தொலைத்தொடர்பு கொபுரங்களுக்குத் தேவையான மின்சாரத்தில் பாதியை ஹைப்ரிட் (சோலார் மற்றும் காற்றாலை) முறையில் தானே தயாரித்துக் கொள்ள வேண்டும் , என்பது போன்ற சட்டங்கள் இயற்றப் பட்டும் சரிவர நடைமுறையில் இல்லை.இவை சரிவர நடைமுறைப் படுத்தப் பட வேண்டும்.

மின்சாரம் என்பது வெறும் நிலக்கரியிலும், நீரிலும், கதிரியக்க முறையிலும் மட்டும் பெறக்கூடிய விஷயமல்ல. நாம் தினந்தோறும் வெளியேற்றும் வீட்டுக் கழிவுகளில் இருந்து கொஓது மின்சாரம் தயாரிக்க முடியும். ஆதிஷா வினோ அவர்கள் சமீபத்தில் கழிவுகள் பற்றிய ஒரு அருமையான கட்டுரை எழுதி இருந்தார். இது போன்ற கழிவுகளைச் சரியான முறையில் உபயோகித்தால் அதன் மூலம், நமக்குத் தேவையான அளவு மின்சாரத்தை நாமே தயாரிக்க முடியும். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், கழிவுகள் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரித்து, அதன் மூலம் பல கிராமங்களின் மின் தேவையை தன்னிறைவு அடையச் செய்து காட்டி இருக்கிறார்கள். பல்வேறு கிராமங்களில் இவை செயல்படுத்தப் படுகின்றன. கிராமங்களை விட அதிகமான பொருளை உபயோகிப்பவர்கள் நகர மக்கள்.. நம்மால் செய்ய முடியாதா….???

அளவுக்கு அதிகமாக உபயோகித்தல், ஆடம்பரத்திற்காக உபயோகித்தல், வீணாக்குதல் போன்றவற்றைக் குறைக்க விழிப்புணர்வு தேவை.

இப்போதைய தேவைக்கு புதிதாக மின்னாலைகள் தேவை இல்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மக்களுக்குப் பாதுகாப்பு தரும் மின்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நல்ல குடிமக்களாகத் திகழ வேண்டும்.

நன்றி.. சாமக்கோடங்கி

வியாழன், 20 டிசம்பர், 2012

வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?


ஆமாம் இந்த வாட் ஓம் ஆம்பியர் வோல்ட் இதெல்லாம் என்ன? இதை பத்தி தெரிஞ்சுக்கனும்னா கூகிலாண்டவர்கிட்ட கேட்டாப் போதும் பக்கம் பக்கமா லிஸ்ட் தருவார். ஆனா எதுலயும் நேரடியான விளக்கம் இருக்காது, சுத்தி வளச்சுத்தான் சொல்லி இருப்பாங்க எல்லாரும். நானும் அப்படித்தான் சொல்லப் போறேன். இது உங்களுக்கு பயனுள்ள பதிலா இருக்கானு நீங்கதான் சொல்லனும். :(

இதோ ஒரு சிம்பிளான பதில்:

மின் கடதிகள் எப்பொழுதும் நகர்ந்து கொண்டிருக்கும் மின்மூலக்கூறுகளால்(movable charges) ஆனது. மின்னொட்டம்(current) என்பது இந்த மின் மூலகூறுகள் ஓடுவதால் ஏற்படுவது. மின்னழுத்தம்(வோல்ட்)       இந்த      ஒத்த      மின்       மூலக்கூறுகளை  ஒரிடதிலிருந்து இன்னொரு இடதிற்க்கு தள்ளும் வேலையைச் செய்கிறது. ஒவ்வொரு மின்கடதியும்(conductor) ஒரு குறிப்பிட்ட்ட அளவு தடையை இந்த மின்மூலக்கூறுகளின் ஓட்டதிற்க்கு அளிக்கிறது. இந்த தடையை(Resistance) மீறி மின்னூட்டங்கள்(charges) நகர்வதால் கடத்தியில் வெப்பம் உண்டாகிறது. எவ்வளவு மின்மூலக்கூறுகள் ஒரு நொடியில் நகர்கின்றன எனப்தை ஆம்பியர்(Amepre என்ற அலகால் அளக்கிறோம். அந்த நேரத்தில் பரிமாறப்படும் மின்சக்தியானது வாட்(Watt) என்றும், மின்தடை ஓம் (ohm) என்றும் அளக்கபடுகிறது. ஆம்ப்பியர், வோல்ட், வாட், ஓம் ம் சிம்ப்பிள்த்னே. இன்னும் கொஞ்சம் விளக்கமா பார்க்கலாமா?

முதலில் வாட் மற்றும் ஆம்பியர்.
மின்சாரம் பற்றித் தெரிந்து கொள்வதற்க்கு முதல் இதனை தண்ணீருடன் ஒப்பிடலாம். மேல்நிலைத்தொட்டியில் சேகரிக்கப் பட்டிருக்கும் தண்ணீர் எப்படி குழாய்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப் படுகிறது எனப் புரிந்து கொண்டால்( எந்த ஊருல குழாய்ல தண்ணி வருது வெறும் காத்துதான் வருதுனு சொன்னீங்கனா அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது) , அதை போலவே மின் வினியோகம் எப்படி நடக்கிறது என எளிதாக விளக்கம் கொடுக்கலாம்.

முதலில் வாட் மற்றும் ஆம்பியர் பற்றி பார்ப்போம். இரண்டும் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தும் ஏனேன்றால் இரண்டும் ஒரு பொருளின் ஓட்ட வீதத்தை(Flow rate) குறிப்பவை, ஆனால் இவை குழப்பத்தை விளைவிக்க காரணம் எந்த பொருள் கம்பிகளின் வழியே ஓடுகிறது என்று சரியாக விளங்கிக் கொள்ளாமல்( உண்மையில் பாட புத்தகங்கள் இதை சரியானமுறையில் விளக்குவதில்லை) அதன் ஓட்டவீதத்தை பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்பதே ஆகும். தண்ணீர் என்றால் என்னவென்றே தெரியாமல் தண்ணீரின் ஓட்டத்தை பற்றி படித்தால் விளங்குமா??!

மின்சாரம் (current) என்பது ஒரு பொருள் அல்ல, ஒரு பொருளின் ஓட்டத்தை மின்சாரம் என்கிறோம். மின்சாரம் பாய்கிறது என்று சொல்லும் போது எந்த பொருள் கடத்தியில் ஓடுகிறது?. அதன் பெயர் “மின்னூட்டம்”(Charge).

ஆம்ப்பியர்:
கடத்தியின் வழியே எது பாய்கிறது?. அதற்க்குப் பல பெயர்கள் உண்டு.
· மின் மூலக்கூறுகள்
· எலக்ட்ரான்கள்
· மின்னூட்டம்
· எலக்ட்ரான் திரவம்
மின்னூட்டங்கள் “கூலும்”(Coulomb) என்ற அலகால்(unit) அளக்கப் படுகிறது. ஆம்ப்பியர் என்றால் “ ஒரு கூலும் மின்னூட்டங்கள் ஒரு வினாடியில் பாய்கிறது” என்று பொருள். மின்னோட்ட்த்தை நீரோட்டதுடன் ஒப்பிட்டால் ஒரு லிட்டர் தண்ணீர் என்று சொல்வோமே அது போல ஒரு கூலும் மின்னூட்டம் எனச் சொல்லலாம். ஒரு வினாடி நேரத்தில் குழாய்வழியே ஒரு லிட்டர் தண்ணீர் ஓடுகிறது என்றால் அதன் ஓட்ட வீதத்தை (flow rate) ஒருலிட்டர்/வினாடி என அளக்கலாம்,இதை பொதுவாக gpm(gallons per minute) எனக் குறிப்பிடுகின்றனர். இதோ போல் ஒரு கடத்தியில் (conductor or wire) ஒரு வினாடி நேரத்தில் ஒரு கூலும் மின்னூட்டங்கள் பாய்ந்து சென்றால் அதில் ஒரு “ஆம்பியர்” மின்சாரம் செல்கிறது எனக் குறிப்பிடலாம்.

வாட்:
“வாட்”(Watt)- இதுவும் மின்னியல் பொறுத்தவரை குழப்பமான ஒன்று, சரியாகப் புரிந்து கொண்டால் போதும். 40 வாட்ஸ் பல்பு, 60 வாட்ஸ் பல்புனு சொல்லுவாங்க, 1/2 ஹெச்பி(hp) மோட்டார்னு சொல்லுவாங்க. இதேல்லாம் மின்னாற்றலினை(electrical energy)க் குறிக்கும் அளவுகளே. மின்னுட்டங்கள் பாய்வதை மின்சாரம் என்கிறோம், இதன் அலகு ஆம்பியர் எனப் பார்த்தோம். இப்படி ஒன்றைச் சொல்லியதையே மறந்து விட்டு நமது பாடப்புத்தங்கள் மின்னூட்டங்கள் கடத்தியின் வழியே பாய்வதால் மின்னாற்றல் பாய்கிறது, இது வாட் என அளக்கப்படுகிறது என்று விளக்கம் கொடுப்பார்கள். 2 மார்க் வாங்கினாப் போதும்னு நினைக்கிற நம்மாளும் இதை மனப்பாடம் பண்ணி எழுதிட்டு போய்ட்டே இருப்பான். இத புரிஞ்சிக்கனும்னு முயற்சி பன்றவன் பைத்தியம் ஆகிடுவான். ஏன்னா கொஞ்ச நேரம் முன்னாடி மின்னூட்டம் ஓடினா அதுக்கு மின்சாரம்னு பேருனு படிச்சிட்டு, திரும்ப அப்படி ஓடினா அதுக்கு இன்னொரு பேரு, இன்னொரு அலகுனு சொன்னா எது சரி? எது தப்புனு குழப்பம்தான் மிஞ்சும்.

வாட் என்பது மின்னாற்றல் பாய்வு வீதத்(flow rate)தை குறிக்கிறது. ஆனால் இங்கே பாய்வது என்ன? ஆற்றல். “வாட்” என்பது ஒரு வினாடி நேரத்தில் பாயும் மின்னாற்றலைக் குறிக்கும் ஒரு ஆடம்பரமான வார்த்தை(fancy word). அப்படியெனில் மின்னாற்றலின் அளவு என்ன?. எந்த வகையான ஆற்றலும் ஜூல்(Joule) எனற அலகால் அளக்கப் படுகிறது. ஒரு ஜூல் மின்னாற்றலை ஒரிடதிலிருந்து இன்னோரு இடத்திற்ற்கு மின்கடத்தியின் வழியாக பாயச் செய்யலாம். நீங்கள் ஒரு ஜூல் மின்னாறலை ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு மின்கடத்திக்யின் வழியே எடுத்துச் சென்றால், இந்த ஆற்றல் பாய்வு வீதம் 1ஜூல்/வினாடி, “ ஒரு ஜூல் /வினாடி என்பது ஒரு வாட்”

மின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா?

இதுக்கு பதில் சொல்லனும்னா, உங்க வீடல இருக்கிற குண்டு மின்விளக்கை எடுத்துக்குவோம்(Bulb). அந்த மின்விளக்கை இனைக்கும் கடத்தியில்(Wire) மின்னூட்டங்கள்(Electrons) உக்காந்துட்டு முன்னோக்கியும் பின்னாடியும் அலஞ்சிட்டு இருக்கும். படத்தைப் பார்க்கவும். அதுதான் AC அல்டர்நேட்டிங் கரண்ட்(இதுக்கு சரியான தமிழ் வார்த்தை இருந்தால் செல்லவும்) . அதே நேரத்தில் மின்கந்தப் புலத்தால்(Elecromagnetic field) உருவான மின்காந்த அலைகள்(Electro magnetic waves) வேகமாக கட்த்தியில் முன்னேரிச் செல்லும். இந்த அலையில் உள்ள சக்தியானது(Energy) முன்னும் பின்னும் அலையாது, ஆனால் அது கடத்தி வழியாக ஓடி மினியற்றியில் இருந்து விளக்கிற்கு பாயும்.

சரி, இப்ப இந்த கேள்விய நீங்களே கேட்டுப் பாருங்க: மின்னோட்டம் (current) தான் மின்சாரமா(electricicty)?,

அப்படியெனில் நாம் மின்சாரம் கடத்தியின் உள்ளெ உக்காந்து கொண்டு முன்னும் பின்னும் ஓடிகொண்டிருகிறது.

அடுத்து இந்த கோணத்தில் பாருங்கள் அதை ஒரு ஆற்றலின் வடிவாக? . மின்சார்ம் என்பதை மின்னாற்றலாக எடுத்துக் கொண்டால் அது முன்னும் பின்னும் அலைய முடியாது கடத்தியினுள்ளே, அதற்க்கு பதிலாக அது மின்காந்த புலத்தை தோற்றுவித்து முன்னோக்கி ஓடுகிறது.

ஆனால் மேலே சொன்ன இரண்டையும் ஒரெ நேரத்தில் செய்கிறதா? அப்படியெனில் எது மின்சாரம்?

* முன்னும் பின்னும் அலையும் எலக்ட்ரான்களா?

இல்லை

*மிக வேகமா மின்காந்தபுல ஆற்றலா?

- புததகங்களில் தேடினால் முரனாண விளக்கங்கள்தான் உள்ளன.

யாராவது ஜெனரேட்டர் தான் மின்சாரதை உருவாக்குகிறதா என்றால்? மின்னியல் பற்றி நாம் தவறான கோனத்தில் இருக்கிரோம் என்று அர்த்தம்.


இதை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் மின்னியல் என்பது மிகஎளிதானதே.பொதுவாக மின்சாரம் என்பதை பலரும் எப்படிச் சொல்கின்றனர் என்பதைப் பார்ப்போம்....? அதுல எது சரினு நினக்கிறீர்களே அதை ஆழ்ந்து சிந்தியுங்கள். அதுல் ஒன்னுதான் சரி மற்ற எல்லாம் தவறு.விஞ்ஞானிகள், தினசரி வாழ்க்கையில், பள்ளி அறிவியல் புத்தகத்தில் எல்லாம் இந்த மின்சாரத்திற்கு கொடுக்கும் வரையறைகள் என்னனு பாக்கலாமா?

ப்யூஸ்

மின்சாரம் இன்னைக்கு ஒரு முக்கியமான ஒன்றாகிவிட்டது வாழிக்கையில, அது இல்லாம அன்றாட வாழ்க்கைய ஓட்றது கொஞ்சம் கஸ்டம் தான். ஆனா என்ன ஒரு சின்னதா ப்யூஸ் போனாக் கூட , அத மாத்த யோசிக்கிற மக்கள் நிறையப் பேரு இருக்காங்க, காரணம் அதை பற்றிய பயம், சரியான புரிதல் இல்லாமைனு சொல்லலாம். பயப்படும் படியானா, இல்ல தொட்ட உடனே ஆளைக் காலி [பண்ணிடும் பயங்கரமான ஒன்னு இல்ல அது,

மின்சாரம் என்பது,,,,,

 1. விஞ்ஞானிகளைப் பொறுத்த வரை மின்சாரம் என்றால் ஒன்றே ஒன்றுதான்: எலக்ட்ரான்கள் என்னும் எதிர்மின் துகள்(negative charge) புரோட்டான்கள் என்னும் நேர்மின் துகள்(positve charge), அதவது மொத்தத்தில் மின்னூட்டங்கள்(Charges)

எ.கா:- மின்னோட்டம், மின்னோடத்தின் அளவு, எத்தனை கூலூம் மின்னூட்டம் ...

2.தினசரி வாழ்ழ்க்கையில் மின்சாரம் என்றால்: மின்கலத்தில் இருந்தும், மின் இயற்றியில் இருந்தும் அனுப்பப்படும் மின்காந்தபுல ஆற்றல்(electro magnetic field energy) .

எ.கா: மின்சார கட்டணம், kwh (கிலொ வாட் ஹவர்) மின்சாரம் (அதாவது ஒரு யூனிட் மின்சாரம்)

3. பள்ளி மாணவர்களுக்கு: மின்சாரம் என்பது எலக்ட்ரான்களின் ஒட்டம்.

எ.கா: மின்னோட்டம், ஆம்பியர்...

4. மின்சாரம் என்பது எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்களுக்கு இடையில் மொத்த அளவில் உள்ள வேறுபாடு(amount of inbalance) .

எ.கா: நிலை மின்னூடம், மின்ன்னூட்டங்களை அகற்றுதல்(charge discharge)

5.மின்சாரம் என்பது வேறொன்றும் இல்லை மொத்தமாக மின்னூட்டங்களை அடிப்படையாக கொண்ட தத்துவங்கள்

எ.கா

உயிர்மின்னியல்(bio electricity),

பீசோ மின்னியல்(Pizo electricity),

வெப்ப மின்னியல்(thermo electricity),

வளிமண்டலத்தோடு தொடர்புள்ள

மின்னியல்(atmospheric electricity)...Etc..

6. மற்றும் சில பொதுவான வரையறைகள்

"மின்சாரம்" என்பது மின் ஆற்றல் பாய்வதைக் குறிப்பது(electric power, watts),

"மின்சாரம் " என்பது மின் அழுத்த வேறுபாடால் (potential diffrence)

உண்டாவது

"மின்சாரம்" என்பது வேறொன்றும் இல்லை அறிவியலின் ஒரு பிரிவு.


மேலே சொன்னது எல்லாம் மின்சாரத்தை பத்தி நமக்கு சொல்லப்பட்டவை, அல்லது நாம் படித்தவை. இதில் எது சரி? எந்த ஒரு வரையறைய நாம் எடுத்துக்கொள்வது? இல்லை எல்லாமே சரியானதா?

உண்மையிலயே மின்சாரம்னா என்ன?

இதோ எளிமையான பதில் இரண்டு முக்கியமானவை ஒரு கடத்தியின்(conductor) வழியே பாயும்.
அவை,
1.மின்னூட்டம் (eletric charge)
2.மின் சக்தி(Electrical Energy)

இதனுடன் சேர்ந்து வேறு சிலவும் கடத்தியில் பாயும், இப்பொதைக்கு எளிமையாக்க அதையேல்லாம் தவிர்த்து விடுவோம்.இரண்டு பொருள்கள் கடத்தியில் ஓடுகின்றது, இரண்டையுமே நாம் மின்சாரம் என அழைக்க முடியாது. இதயே காரணம் காட்டி அப்ப மின்சாரம்னா என்ன? அப்படினும் கேட்க கூடாது. அதற்க்கு பதிலாக

1. எந்த பொருள் பல்பி(bulb)னுள் கடத்தி வழியாகச் சென்று மீண்டும் வெளியே வருகிறது?

2. எந்த பொருள் பல்பினுள் சென்று ஒளி(light)யாக மாறுகிறது?

முதல் கேள்விக்கு பதில் #1 மின்னூட்டம் (Electric Charge).

மின்னூட்டம் என்பது பல்பின் வழியாக மின்சுற்றில்(circuit) பாயும் ஒரு பொருள். பொதுவாக இந்த செயலின் போது ஒரு மின் சுற்றில் மின்னுட்டம் இழப்பதுமில்லை, அதெ போல் மின்னுட்டம் பெறப்படுவதும் இல்லை. மேலும் மின்னூட்டம் மிக மெதுவாகப் பாயும், இன்னமும் சில நேரங்களில் கடத்தியில் ஓடாமல் ஒரே இடத்தில் இருக்கும். மாறுதிசை மின்னோட்ட மின்சுற்றில் மின்னூட்டம் முன்னோக்கி பாயாது. கடத்தியினுள் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருக்கும்.

இரண்டாவது கேள்விக்கு பதில் # மின்சக்தி (Electric energy)

இதயே மின் காந்த சக்தி எனவும் அழைக்கலாம்.(Electro magnetic energy). இந்த சக்தியானது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பாயும். மிக வேகமாகச் செல்லக் கூடியது. சற்றேரக்குறைய ஒளியின் வேகத்தில் செல்லும். இதை ஒரு மின்சுற்றிலிருந்து ஆக்கவும் முடியும், இல்லை வேறு வடிவில் தொலைக்கவும் முடியும். அதாவது மின்விளக்கு கொண்ட மின் சுற்றில்(Circuit) மின்சக்த்தியானது ஒளி மற்றும் வெப்பமாக மாற்றப் படுகிறது.

மேலே சொல்லப்பட்ட இரண்டுக்குமான வித்தியாசம்

மின்னூட்டம்(Electric charge)---------------------------------------------------------மின்சக்தி(Electro magnetic energy)

1)மிக மெதுவாகச் செல்லும். சில நேரங்களில் நின்று விடும் ------- எப்பொழுதும் வேகமாகச் செல்லும், ஒளியின் வேகத்திற்க்கு நிகராக.

2)இதன் ஓட்டம் மின்னோடாம்(electric current) எனப்படும்.ஆம்பியர்(Ampere) என்னும் அலகால்(Unit) அளக்கப் படுகிறது. -------
இதன் ஓட்டம் மின்சத்தி எனப்படுகிறது. வாட்(Watt) என்னும் அலகால் அளக்கப்படுகிறது

3)பல்பின் வழியாகப் பாய்ந்து செல்வது -------
பல்பினால் உபயொகப்படுத்தப் படுகிறது(அதாவாது ஒளியாக மாற்றப் படுகிறது.)

4)ஆடலோட்ட(AC) மின் சுற்றில் முன்னும் பின்னுமாக ஓடும். .-------ஆடலோட்ட(AC) மின் சுற்றில் தொடர்ந்து முன்னோக்கி பாயும்.

5)உலோகங்களில் இருந்து பெறப்படுகிறது. ---------
மின் இயற்றி(Generators), மின் கலம்(Battery)இவற்றிலிருந்து பெறப்படுகிறது.

6)இது ஒரு பொருளின் அடிப்படைத்துகள் ---------
இது ஒரு வகையான ஆற்றல்.

7)அடிப்படை துகள் எலக்ட்ரான்களும், புரோட்டான்களும். --------
இதன் அடிப்படை போட்டான்கள்(Photons) ஆகும்.

8)கடத்தியின் உள்ளே பாய்ந்து செல்வது -------
கடத்தியினைச் சுற்றியுள்ள வெளியில் பயனம் செய்வது.

9)சுழல் ஓட்டம்(Circular flow)ஒரு மின்சுற்றில் சுற்றிச் சுற்றி வரும் - --------
ஒரு முனை ஓட்டம்(one way flow)மின் மூலத்திலிருந்து(source) மின்சுமை(Load) நோக்கி பாயும்.

10) இயற்கையாகவே இருப்பது ---------
மின்சாரக் கம்பெனிகளால் உருவாக்கி விற்கப் படுவது.

11) பழைய விஞ்ஞானிகள் இதை மின்சாரம்(Electricity) என்றார்கள். ----------
புதிய முதலாலிகள இதை மின்சாரம் என்கிறார்கள்

ஒரு சின்ன வரலாறு மின்னியல்(Electricity) பற்றி:-

6 ஆம் நூற்றாண்டு

மின்சாரம் கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் தேல்ஸ் என்ற தத்துவவியலாளரின் குறிப்பின் மூலம் நாம் இதை அறியலாம். தேல்ஸ் அவர் மாணவர்களுக்கு இச்சோதனையை நடத்திக்காட்டுவாராம். அவர் அம்பரைக் கம்பளியால் நன்கு தேய்ப்பார், அப்பொருது அம்பரிருந்து 'கிரிக் கிரிக்' என்ற சத்தம் எழும், பின்பு அவர் அம்பரை குவிக்கப்பட்டுள்ள சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வைக்கோல் அல்லது மர இழைகள் மீது ஒரு செமீ மேல் பிடிப்பார், அப்போது வைக்கோல் அல்லது மர இழைகள் அம்பரை நோக்கித் துள்ளும். இருட்டான அறையில் இச்சோதனையை நடத்தினால், சில நேரங்களில் அம்பரில் இருந்து தீப்பொறிகள் எழும். இலத்தீனில் அம்பரை எலக்டிரான் என்ழழைப்பர். இச்சொல்லே திரிந்து மின்சாரத்தை ஆங்கிலத்தில் "எலட்டிரிசிட்டி" என அழைக்கின்றனர். தேல்ஸ் கண்டுபிடித்த மின்சக்தியை நாம் இப்பொழுது நிலை மின்சக்தி என அழைக்கிறோம்.

1720 ல்:- ஸ்டீபன் கிரெ(Stephen Gray) என்பவர் நிலை மின்னூட்டங்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கடத்தமுடியும் என நிரூபித்தார்

1750 ல்:- பெஞ்ஜமின் பிராங்க்ளின் அவர்க்ளின் ஒரு Fluid theory of Electricity மின்னியலின் ஆறிவியல் பூர்வமான செயல்முறைகளை ஒருமுகப்படுதியது. இதுவே புதிய மின்னியல் அடிப்படைக் கொள்கைகள்உருவாக அடித்தளம் அமைத்தது.

1800ல்:- அலெஸ்ஸான்ட்ரோ வொல்டா அருடைய புதிய கண்டுபிடிப்பாக மின்கலத்தை மீண்டும் பாரசீகர்களுக்கு பின் 1800 ஆண்டுகள் களித்து அறிமுகப்படுதினார்.

1820ல்:- ஹான்ஸ் ஓர்ஸ்டட் மின்காந்த தன்மையை தன்னுடைய பிரபலமான "காம்பஸ்(Compus) மற்றும்மின்சாரம் பாயும் கடத்தி"(current carying wire) சோதனை மூலம் கண்டறிந்தார்.

ஆண்ட்ரு -மேரி ஆம்பியர் மின்சாரம் மற்றும் மின்காந்தம் இவற்ரை வரையறை செய்தார். மேலும் மின்னோட்ட்டத்தை அளவிடும் "அம்மீட்டர்" என்னும் கருவியையும் கண்டறிந்தார்.

ஜார்ஜ் ஓம் மின்சாரம் பறிய ஆய்வுகளை வெளியிட்டார், அதில் அவரது புகழ் பெற்ற ஓம்'ன் விதி (Ohm's law) யும் அடக்கம்.

1830ல்:- மைக்கெல் பாராடெ ஆட்டத்தில் இறன்கினார். மனிதகுலதின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்த நவீன மின்னிய்ல் யுகம் தொடங்கியது....!

" No Cithy with out Electricity"


இன்னும் வரும்...

சனி, 20 அக்டோபர், 2012

உங்கள் வீடுகளிலும் மின்சாரத்தை சேமிக்க...


மின்விளக்குகள்

நீங்கள் பாவிக்கும் மஞ்சள் ஒளி மின் குமிழ்களைத் தவிர்த்து வெள்ளொளி மின் குமிழ்களை உபயோகிக்கவும். வெளிச்சம் தேவையான நேரங்களில் மட்டுமே மின் விளக்குகளைப் பாவியுங்கள்! நீங்கள் செலுத்தும் மின் கட்டணமானது, மின் விளக்குகளின் எண்ணிக்கை, அவற்றின் வலு, அவை பாவிக்கப்படும் நேரம் ஆகியவற்றில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை நினைவில் வைத்திருங்கள்!

குளிர்சாதனப் பெட்டிகள்

குளிர்சாதனப் பெட்டியின் கதவைத் திறக்க முதல் ஒரு கணம் சிந்தியுங்கள். வெளியில் எடுக்க வேண்டிய பொருட்கள் எவை? உள்ளே வைக்க வேண்டிய பொருட்கள் எவை? எனத் தீர்மானித்த பின்னரே கதவைத் திறக்க வேண்டும்.

அடிக்கடி கதவைத் திறப்பதையும் தவிர்க்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் ஏதாவது பழுதுகள் இருந்தால் உடனேயே திருத்திவிட வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டியைப் பொருட்களால் நிறைக்கக்கூடாது. சூரிய ஒளி நேரடியாகப்படும் இடங்களிலோ, வெப்பம் பிறப்பிக்கப்படும் இடங்களிலோ குளிர்சாதனப் பெட்டியை வைக்கக் கூடாது. அதேபோல் சூடான பொருட்களையும் குளிர்சாதனப் பெட்டியினுள் வைக்கக்கூடாது.

மின்னழுத்திகள்

அழுத்தப்படுவதற்குக் குறைந்தளவு வெப்பம் தேவைப்படும் ஆடைகளிலிருந்தே அழுத்த ஆரம்பிக்க வேண்டும். அதேபோல மின்னழுத்தியின் மின்னிணைப்பைத் துண்டித்த பின்னரும் அதன் வெப்பம் குறையும் வரை குறைந்தளவு வெப்பம் தேவைப்படும் ஆடைகளை அழுத்த வேண்டும்.

அடிக்கடி மின்னழுத்தியைப் பாவிக்காமல், ஒரே தடவையிலேயே பல ஆடைகளை அழுத்தப் பழக வேண்டும். மின்னழுத்தியை ஒருபோதும் நிலைக்குத்தாக வைக்கக் கூடாது. நீராவி அழுத்திகள் சிக்கனமானவையாகும்.

வெப்பத்தைத் தெறிப்படையச் செய்யக்கூடியதாக அழுத்தும் மேசைகளின் மேற்பரப்பு அமைய வேண்டும். ஆடைகளை அழுத்த முதல் அவசியம் அழுத்த வேண்டுமா எனச் சிந்தித்து தேவையாயின் மட்டுமே அழுத்த வேண்டும்.

தொலைக்காட்சிகளும் கணினிகளும்

பலர் தொலைக்காட்சி பார்த்து முடிந்தபின் தொலை இயக்கியால் அதன் இயக்கத்தை நிறுத்திவிடுவர். அவ்வாறு தொலைக்காட்சியின் இயக்கம் நிறுத்தப்படும் போது அதற்குத் தேவையான வலு 7.3 w ஆகும். அதாவது மாதாந்தம் 5.3 அலகுகள் மின்சாரம் தேவைப்படுகிறது-

ஆகையால் தொலைக்காட்சி பாவிக்கப்படாத சந்தர்ப்பங்களில் அதன் ஆளியைத் திறந்து மின்னிணைப்பைத் துண்டிப்பதன் மூலம் மின் சக்தியைச் சேமிக்கலாம்.

அதேபோன்ற செயற்பாட்டை (Standby) கணினியில் மேற்கொண்டால் கணினிக்குத் தேவையான வலு 60 w ஆகும். இதனால் மாதமொன்றிற்கு 43 அலகுகள் மின்சாரம் தேவைப்படுகிறது. கணினிப் பாவனையாளர்கள் இதை உணர்வதில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

மின் விசிறிகள்

சாதாரண மின் விசிறிகளைவிட மேசை மின் விசிறிகள் சிக்கனமானவை. முன்னர் பாவனையிலிருந்த மின் விசிறிகள் எவ்வளவு வேகமாகச் சுழன்றாலும் ஒரேயளவிலான மின்சாரத்தையே உள்ளெடுக்கும். ஆனால், தற்போது பாவனையிலிருப்பவை அவ்வாறானவையல்ல.

மின் விசிறிகளிற்காகச் செலவாகும் மின்சாரத்தைச் சேமிப்பதற்கான சிறந்த வழி, காற்றோட்டமான வீடுகளை அமைத்தலாகும். இல்லாத பட்சத்தில் காற்றுச் சீராக்கிகளைப் பயன்படுத்தியும் மின்சாரத்தைச் சேமிக்கலாம்.


மூலம் : மின்வலு எரிசக்தி அமைச்சின் இணையத்தளம்

இன்று மின்சாரத்தை சேமிக்க சில டிப்ஸ்கள்

தவிர்க்கவே முடியாதது... தமிழகமும் மின் வெட்டும் என்றாகிவிட்டது!மின்சாரம் இருக்கும் நேரங்களில் அதை அதீதமாகச் செலவழிப்பது, மின் வெட்டு நேரத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே, மின் சிக்கனம் தேவை இக்கணம்.

டாஸ்க் லைட்டிங்’ எனும் முறையைப் பின்பற்றலாம். அதாவது, உங்கள் வேலைக்குத் தேவையான மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக, படுக்கை அறையில் புத்தகம் படிக்கும் சமயம், மொத்த அறைக்குமான விளக்கை ஒளிரவிடாமல், டேபிள் லேம்ப்பை மட்டும் பயன்படுத்துவது.

செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்தவுடன் அதன் ப்ளக்கை மின்சார இணைப்பில் இருந்து எடுத்துவிடுங்கள். என்னதான் சுவிட்சை ஆஃப் செய்தாலும், அதில் மின்சாரம் கடந்துகொண்டேதான் இருக்கும். அதனால் மின்சாரம் விரயமாவதுடன், மின் சாதனப் பொருட்களுக்குச் சேதமும் உண்டாகலாம்.

குளிர்சாதனப் பெட்டியின் 'கன்டென்சர் காயில்’-ஐ வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துங்கள். அதில் படியும் தூசி, குளிர்சாதனப் பெட்டியின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து 25 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.

மேஜை விளக்கினை அறையின் ஓரத்தில் வைக்கவும். அதனால், விளக்கின் ஒளி இருபுறச் சுவர்களிலும் பட்டு பிரகாசமாகப் பிரதிபலிக்கும்.

வீட்டு உபயோகத்துக்கு என்றால், 'டெஸ்க்டாப்’ கணினியைவிட லேப்டாப்பே சிறந்தது. லேப்டாப் கணினியைவிட டெஸ்க்டாப் கணினி ஐந்து மடங்கு அதிகமான மின்சாரத்தை உட்கொள்ளும். ஒருவேளை டெஸ்க்டாப் கணினி வாங்கினாலும், அதற்கு எல்.சி.டி. மானிட்டரையே தேர்ந்தெடுங்கள்.

கணினியில் ஸ்க்ரீன்சேவர்கள் வைத்தால், மின்சாரப் பயன்பாடு குறையும் என்பது தவறு. பயன்பாடு இல்லாத நேரத்தில், மானிட்டரை அணைத்துவிடுவதே சிறந்தது.

வாஷிங் மெஷினின் அதிகபட்சக் கொள்ளவுக்குத் துணிகளை நிரப்புங்கள்.

ப்ரிஜ்ஜின் குளிர்நிலையை 37 டிகிரி முதல் 40 டிகிரிக்குள் செட் செய்துகொள்ளுங்கள்.

திரவப் பொருட்களை மூடிவைத்து பிறகு ஃப்ரிஜ்ஜுக்குள் வைக்கவும். திறந்துவைத்தால், ஃப்ரிஜ்ஜுக்குள் ஈரப்பதம் அதிகமாகும். அதனால், அதிக வேலைப் பளு காரணமாக மின்சாரம் கூடுதலாகச் செலவாகும்.

டிஸ்போஸபிள் பேட்டரிகளைவிட ரீ-சார்ஜ் வசதியுள்ள பேட்டரிகளைப் பயன்படுத்தலாம்.

மின் வெட்டு சமயங்களைச் சமாளிக்க, சந்தையில் என்னவெல்லாம் பொருட்கள் கிடைக்கின்றன...

     எமர்ஜென்ஸி ஃபேன்: டூ இன் ஒன் அல்லது த்ரீ இன் ஒன் ஆகக் கிடைக்கிறது இந்த எமர்ஜென்ஸி ஃபேன். எமர்ஜென்ஸி விளக்கும் ஃபேனும் பொருத்தப்பட்டு இருக்கும் சாதனத்தின் விலை 650 முதல் 800 வரை. ஃபேன், விளக்கு மற்றும் எஃப்.எம். ரேடியோ ஆகியவை இணைந்த சாதனம் 1,000 முதல் 1,200 வரை. சார்ஜ் செய்துகொண்டு மின்சாரம் இல்லாத சமயங்களில் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் சாதனங்களை முழுமையாக சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு, ஃபேன், விளக்கு, எஃப்.எம். இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால், நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை இயங்கும். மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் ஒரு மணி நேரம் மட்டுமே சார்ஜ் நிற்கும்.

மொபைல் பவர் பேக்-அப்: மின் வெட்டு சமயம் உங்கள் அலைபேசியை சார்ஜ் ஏற்றிக்கொள்ள உதவும் சாதனம் இது. மின்சாரம் இருக்கும் சமயம் இதை முழுக்க சார்ஜ் செய்துவிட வேண்டும். சுமார் மூன்று மணி நேரங்களில் இது சார்ஜ் ஆகிவிடும். பிறகு, மின்சாரம் இல்லாத சமயம் அலைபேசியில் இந்தச் சாதனம் மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இரண்டு அலைபேசிகளை இதன் மூலம் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதன் விலை 1,600 முதல் 2,000 வரை!

மினி இன்வெர்ட்டர்: வழக்கமான இன்வெர்ட்டரின் மினி வடிவம். இதன் மூலம் லேப்டாப் இயக்கம், மொபைல் சார்ஜ் ஆகியவற்றின் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இதன் விலை 2,500 முதல் 3,500 வரை.

சோலார் லேம்ப்: வெயிலில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருளைப் போக்கும் விளக்குகள் இவை. போட்டோவால்டிக் சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி இந்தச் சாதனத்தின் எல்.இ.டி. விளக்கை ஒளிரவைக்கும். சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிட்டால், இதன் சோலார் பேனல் சக்தியை உள்வாங்கிக்கொண்டு, மின் வெட்டு சமயங்களில் ஆபத்பாந்த வனாக ஒளி கொடுக்கும். முழுக்க சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு இது சுமார் ஆறு மணி நேரம் வரை ஒளி கொடுக்கும். விலை 500 முதல் 800 வரை

Thanks : விகடன்



சனி, 29 செப்டம்பர், 2012

இன்வெர்ட்டர்: என்னென்ன கவனிக்க வேண்டும்?

மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை விற்கும் நிறுவனங்களும், வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது. இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை   எப்படி  பராமரிப்பது  என்பது குறித்து பார்போம்.

வியாழன், 27 செப்டம்பர், 2012

மிக்ஸி


 
ஆங்கிலத்தில் ‘மிக்ஸ்’ என்றால் கலப்பது என்று பொருள். ஆனால் இந்த மிக்ஸி என்னும் கருவி அதற்குமேல் பல காரியங்களைச் செய்கிறது. மின்சாரம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தபின் உருவாக்கப்பட்ட பல வீட்டு உபயோகக் கருவிகளில் இந்த மிக்ஸியை முக்கியமானது என்று சொல்லலாம்.



இதுபோன்ற கலக்கும் கருவி ஆரம்பத்தில், முட்டையை உடைத்து அதன் கருவை நன்கு அடித்துக் கலக்க என்று உருவாக்கப்பட்டது. அங்கிருந்து வளர்ச்சி பெற்று, பழங்களை அரைத்து ஜூஸ் உருவாக்கக்கூடியதாக மாற்றம் பெற்றது. பின் தயிர் கடைய, மாவு அரைக்க, உலர் தானியங்கள், பருப்புகள் ஆகியவற்றை அரைக்க என்று பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளது.

அடிப்படையில் இந்தக் கருவியில் இருப்பது இரண்டு முக்கியமான பாகங்கள்: ஒரு மின்சார மோட்டார், பிளேடு (Blade) எனப்படும் பல்சக்கரம்.

மின்சார மோட்டார் என்ற கருவிக்குள் மின்சாரம் செல்லும்போது அதில் உள்ள ரோட்டார் எனப்படும் உருளை வேகமாகச் சுழல ஆரம்பிக்கும். செலுத்தப்படும் மின்சாரத்தைக் கட்டுப்படுத்துவதன்மூலம் இந்த ரோட்டாரின் வேகத்தைக் கூட்டலாம், குறைக்கலாம். சுழலும் இந்த உருளையுடன் பல் சக்கரத்தை இணைத்தால் மிக்ஸி, ஜ்யூசர், ஃபுட் பிராசஸர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கருவி தயார்.

அடுத்தது இந்தப் பல் சக்கரம். உங்கள் வீட்டு மிக்ஸி ஜாடிகளை எல்லாம் எடுத்து அதில் உள்ள பல் சக்கரங்களைப் பாருங்கள். அவற்றில் ஒருவித சிம்மெட்ரி (சீரொருமை) இருக்கும். இரண்டு பற்கள் இருந்தால் அவை எதிரெதிராக 180 டிகிரி தள்ளி இருக்கும். மூன்று பற்கள் இருந்தால் 120 டிகிரி தள்ளி ஒவ்வொன்று என்று இருக்கும். பற்கள் எப்படி நீட்டிக்கொண்டிருக்கின்றன, அவற்றின் ஓரம் எப்படி கூர்மையாக அல்லது ரம்பத்தின் முனைபோல உள்ளது என்பதைப் பார்வையிடுங்கள்.

இந்தப் பல் சக்கரம்தான் பொருள்களை வெட்டுகிறது; அரைக்கிறது; கரைக்கிறது. இந்தச் சக்கரம் ஒரு ஜாடிக்குள் இருக்கும். அந்த ஜாடிக்குள் பொருள்களைப் போட்டு மூடியபிறகே, மோட்டாரை இயக்குவோம். மோட்டார் இயங்கும்போது பல்சக்கரம் அதிவேகத்தில் சுழலுகிறது.

பல்சக்கரத்தில் மாட்டிய பொருள்கள் - திடமாக இருந்தாலும் சரி, திரவமாக இருந்தாலும் சரி - தூக்கி அடிக்கப்படுகின்றன. இந்தக் கட்டத்தில் ஒரு முக்கியமான இயல்பியல் அடிப்படையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். கனம் குறைந்த பொருள்கள் மையப்பகுதியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். ஆனால், கனம் அதிகமான பொருள்கள் வெளிப்புறத்தை நோக்கிச் செல்லும். இது ‘மைய விலகு விசை’ காரணமாக நடக்கிறது.

பருப்பை அரைத்துப் பொடியாக்கும் எண்ணத்துடன் வறுத்த துவரம் பருப்பை மிக்ஸியில் போடுங்கள். கனமான முழுப் பருப்பும் படு வேகத்தில் பல்சக்கரத்தில் அடிபட்டு சுவற்றில் மோதி மீண்டும் உள்ளே திருப்பி அடிக்கப்பட்டு, மீண்டும் பல் சக்கரத்தில் மோதும். இப்படி நடக்கும்போது அது தெறித்து உடையும். அப்படி உடைவதில் பெரிய துகள்கள் மீண்டும் மீண்டும் வேகமாகச் சுவற்றில் மோதி உள்ளே வந்து உடைபடும். சிறிய துகள்கள் மையப்பகுதியிலேயே இருக்கும்.

மிக்ஸியால் என்ன சாதிக்கமுடியும் என்பது அதன் பல்சக்கரங்களின் வடிவமைப்பு சார்ந்தது. தக்காளி ஜூஸ் போட மிக எளிதான இரண்டு பல்களைக் கொண்ட சக்கரம் போதும். ஆனால் தோசைக்கு மாவரைக்க இந்தப் பல் சக்கரம் போதாது. சொல்லப்போனால், மிக்ஸியில் தோசை அரைப்பதைவிட கிரைண்டர் எனப்படும் கல் உரலில் அரைப்பதுதான் சரி.

அம்மா (அல்லது அப்பா!) சமையலறையில் வேலை செய்யும்போது எட்டிப் பாருங்கள். மிளகு, துவரம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை வறுத்து, அதனை ஒருவிதமான ஜாடியில் போட்டு மிக்ஸியில் அரைத்தெடுத்து அந்தப் பொடியை ரசத்தில் சேர்ப்பார். மறுபக்கம் இஞ்சி, பூண்டு, வதக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீர் சேர்த்து இன்னொரு ஜாடியில் அரைத்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஒரு சைட் டிஷ் செய்வார். உலர்ந்த பொருள்களை பொடியாக அரைக்க ஒருவிதமான பல் சக்கரம் தேவை. ஈரமான பொருள்களை விழுதாக, துவையல்போல அரைக்க சற்றே வேறு விதமான பல் சக்கரம் தேவை.

பொதுவாக அமெரிக்காவில் விற்கப்படும் மிக்ஸி அல்லது ஃபுட் பிராசஸரைக் கொண்டு இந்தியச் சமையலுக்குத் தேவையான அரைத்தல்களைச் செய்வது எளிதல்ல. இந்தியாவில் இந்தியச் சமையலுக்கென பிரத்யேகமாக மிக்ஸிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் வலு அதிகமான மோட்டார் இருக்கும். பலவித வேகங்களில் சுழலும் மோட்டார் இது. பல்சக்கரங்களும் அதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மிக்ஸி புழக்கத்துக்கு வருவதற்குமுன்னர், இந்திய அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியைப் பயன்படுத்தினர். இன்று அம்மி, கல்லுரல், உரல்-உலக்கை ஆகிய சாதனங்கள் காணாமல் போய்விட்டன. அவற்றுக்கு பதிலாக மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சமையல் அறையில் வேலை நிச்சயம் எளிதாக ஆகியுள்ளது.

புதன், 12 செப்டம்பர், 2012

பிரிட்ஜ் பராமரிப்பு - சில யோசனைகள்


 1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

 2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

 3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

 4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

 5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

 6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

 7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

 8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

 9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

 10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

 11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

 12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

 13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.

 14. பச்சை மிளகாய்  வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

 15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

 16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

 17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

 18.  சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

 19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

 20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

டியூப்லைட்


   சின்ன விஷயம் தான் ஆனால் சமயத்தில் பல்ப் நம்மை பழி வாங்கிவிடும்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் முயற்சி செய்து பாருங்கள் . அப்படியும்  முடியவில்லையெனில் கட்டுரையின் இறுதியில் உள்ள வழியை முயற்சிக்கவும்.

 1. விளக்கு எரியவில்லை.

   சுட்ச் போடவும்.

 2.விளக்கு எரியத்துவங்குவதற்கான அறிகுறிகளே இல்லை.

   அ. எல்லா இணைப்புகளும் சரியாக உள்ளதா?

   ஆ. ஸ்டார்டர் சரியாக பொருந்தியுள்ளதா?

   இ. பல்ப் நல்ல நிலையில் உள்ளதா?

   ஈ. சோக் நல்ல நிலையில் உள்ளதா?

   உ. கெப்பாசிட்டர் நன்றாக உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

 3.விளக்கின் இருபக்கமும் சிவப்பு நிறத்தில் எரிகிறது?

   அ.பிரகாசமாக எரிய வாய்ப்பில்லை. ஸ்டார்டரை மாற்றவும்.

 4. விளக்கின் ஒரு பக்கம் மட்டும் எரிந்து விளக்கு முழுவதும் எரிய  வாய்ப்பில்லை?

   அ. கனெக்சனை சரி பார்க்கவும்.

   ஆ. ஸ்டார்டரை மாற்றவும்.

 5. விளக்கு விட்டு விட்டு எரிகிறது.?

   அ. டி யூப் லைட் பரிசோதிக்கவும்.

   ஆ. இணைப்புகளை சரிபார்க்கவும்.

   இ. ஸ்டாடரை மாற்றவும்.

   ஈ. சோக்கை பரிசோதிக்கவும்.

   உ. வோல்டேஜ் குறைவாக இருக்கலாம்.

 6. எரிந்து கொண்டிருந்த விளக்கு விட்டு விட்டு எரிதல்.

   அ. டி யூபை பரிசோதிக்கவும்.

   ஆ. ஸ்டாடரை மாற்றவும்.

   இ. வோல்டேஜ் குறைவாக இருக்கலாம்.

 7. விளக்கில் வளை வளைவுகளாக ஒளிக்கற்றை நகர்தல்.

   அ. புதிய விளக்குகளில் வர வாய்ப்புண்டு. ஆதலால் விளக்கை ஆப்   
    செய்து விட்டு சிறிது நேரம் கழித்து ஆன் செய்யவும். அப்போதும் 
   
    அப்படியே இருந்தால் டியூப் லைட்டை மாற்றவும்.

 8. விளக்கு எரிய தாமதமாகுதல்?

   அ. சோக்கை சோதிக்கவும்.

   ஆ. வோல்டேஜ் குறைவாக இருக்கலாம்.

 9. சுவிட்ச் ஆன் செய்தவுடன் பியூஸ் ஆகிவிடுதல்?

   அ. இணைப்புகளில் எர்த் ஆகியிருக்கலாம். பரிசோதிக்கவும்.

   ஆ. சோக் எர்த் ஆகியிருக்கலாம் . பரிசோதிக்கவும்.

 10. வெளிச்சம் திடீரென குறைதால்?

   அ. டியூபின் ஆயுட்காலம் முடியும் சமையம். இணைப்புகளை    
    சரிபார்த்து வேறு டியூப் லைட் மாற்றவும்.

 11. புதிய விளக்கு சில நாட்களிலேயே எரியவில்லை?

   அ. அளவுக்கு அதிகமான திறன் கொண்ட சோக்காக இருக்கலாம்.

    சோக்கை மாற்றவும்.

   ஆ. வோல்டேஜ் அதிகமாக இருக்கலாம்.

  சுய சோதனைகள்.

   சோக்குகளை பரிசோதித்தல்.

    சோக்குடன் சீரிஸ் முறையில் ஒரு சாதா பல்பை (குண்டு பல்ப்)

    இணைத்து ஆன் செய்யும்போது பல்ப் டிம்மாக எரிந்தால் சோக்

    நல்ல நிலையில் உள்ளது எனவும்., பிரகாசமாக எரிந்தால்    
    அல்லது எரியவில்லையென்றால் சோக் பழதாகிவிட்டது என

    அறியலாம்.

  ஸ்டார்டர்களை பரி சோதித்தல்.

    ஸ்டாடருடன் சீரிஸ் முறையில் ஓரு சாதா பல்பை இணைத்து

    ஆன் செய்யும் போது பல்ப் விட்டு விட்டு எரிந்தால் ஸ்டாடர்

    நல்ல நிலையில் உள்ளது எனவும், தொடர்ந்து சீராக எரிந்தால்

    ஸ்டாடர் பழுது அடைந்துள்ளது என்றும் அறியலாம்.

  மேற்கண்ட முயற்சியில் டியூப்லைட் எரியவில்லை யெனில் வேறு ஓரு

 புதிய டியூப் லைட் செட் வாங்கி மாற்றிவிடவும்.

ஏஸி பராமரிப்பது ஈஸி!


  
தமிழகத்தைப் பொறுத்தவரை ஏ.ஸி இல்லாத கார்களை வாங்குபவர்கள் வெறும் 10 சதவிகிதத்தினரே! காரில் ஏ.ஸி இருந்தாலும் ஒழுங்காக இயங்கவில்லைஎன்றால், எந்தப் பயனும் இல்லை. கார் ஏ.ஸியைப் பராமரிப்பது எப்படி? 
 
காருக்குள் நாற்றம்!

காருக்குள் ஏ.ஸி இயங்கிக்கொண்டு இருக்கும் போது, ஒரு விதமான துர்நாற்றம் வந்தால், அதற்கு கிருமிகள்தான் காரணம். ஏ.ஸி ஃபேன் கேஸிங்கில் இருக்கும் கூலிங் காயில் அல்லது ஃபில்டரில் பாக்டீரியாக்கள் தங்கி, பல்கி பெருகுவதற்கு மூல காரணம், இங்கே ஏற்படும் அதிகப்படியான ஈரப் பதத்தால், பாக்டீரியாக்கள் தங்க வசதியாக அமைந்து விடுகிறது. இதை நீங்களே சுத்தப்படுத்த முடியாது. பூஞ்சானம், கிருமிகள் தங்குவதைத் தடுப்பதற்கு ஏ.ஸியில் இருக்கும் ஈரப்பதத்தைக் குறைக்க வேண்டும். அதனால், காரை வீட்டில் நிறுத்தப்போகும் முன், ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே ஏ.ஸியை ஆஃப் செய்து விடுங்கள். அப்போதுதான் ஏ.ஸியில் இருக்கும் எவாப்ரேட்டர் ஈரத்தை ஈர்த்து, பாக்டீரியாக்கள் தங்காமல் தடுக்கும்.
 
ஏ.ஸி எஃபெக்ட் இல்லை!

ஏ.ஸி எஃபெக்ட்டாக இல்லை என்றால், காரை ஆன் செய்து விட்டு தெர்மா மீட்டரை ஏ.ஸி வென்ட்டில் வைத்து செக் செய்யுங்கள். ஆறு முதல் ஒன்பது டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது என்றால், ஏ.ஸி சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம். ஒன்பது டிகிரிக்கு மேல் இருந்தால், ஏ.ஸியில் பிரச்னை இருக்கிறது. ஏ.ஸியில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க கேஸ்கெட் மற்றும் ஹோஸ்களில் லீக்கேஜ் ஏற்படும்.

 இதனால், ரெஃப்ரிஜெரன்ட் கேஸ் அளவு குறையும். இதனால் ஏ.ஸி எஃபெக்ட் குறைய வாய்ப்புகள் அதிகம். அதேபோல், ஏர் ஃபில்டரில் தூசு அடைத்திருந்தாலும், ஏ.ஸி எஃபெக்ட் குறையும். அதைச் சுத்தம் செய்யுங்கள். மிகவும் மோசமாக இருந்தால், ஏர் ஃபில்டரை மாற்றி விடுவதே நல்லது!
 
பெல்ட் மற்றும் கன்டென்ஸர்

ஏ.ஸி அதிக சத்தம் எழுப்பினால், அதிர்வுகள் இருந்தால் கம்ப்ரஸர் மவுன்ட்டிங்கில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். கம்ப்ரஸர் பெல்ட் தளர்வாக இருக்கலாம். கன்டென்ஸர் காயிலில் தூசுகள் அடைத்திருந்தாலும், ஏ.ஸியின் பர்ஃபாமென்ஸ் குறையும். பொதுவாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏ.ஸி மெக்கானிக்கை வைத்து ஏ.ஸியின் பர்ஃபாமென்ஸை செக் செய்யுங்கள். காரை எப்போதுமே நிழலில் நிறுத்துங்கள். அதேபோல், சூரியன் இருக்கும் திசையில் காரின் பின் பக்கம் இருக்கும்படி பார்த்து பார்க் செய்யுங்கள். காரை எடுத்தவுடனேயே ஏ.ஸியை ஆன் செய்யாதீர்கள். காரணம், ஏ.ஸியை முழுவதுமாக கூல் செய்யவே அதிகப்படியான சக்தி இழுக்கும். அது இன்ஜின் பர்ஃபாமென்ஸைப் பாதிக்கும். சிறிது நேரம் ஜன்னல்களை கீழே இறக்கி வைத்து காரை ஓட்டிவிட்டு, இன்ஜின் நன்கு சூடேறிய பிறகே ஏ.ஸியை ஆன் செய்யுங்கள்.
 
20 டிகிரிக்குக் கீழ் ஏ.ஸி டெம்ப்ரேச்சரை வைப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல! அதே போல், ஏ.ஸி வென்ட்டுகள் நேராக முகத்துக்கு அடிப்பது போலும் இருக்கக் கூடாது!

"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் ?

இந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க ஏ.சி.யை வாங்க தீர்மானித்து விட்டீர்களா? எதை வாங்குவது என்று நீங்கள் குழம்பினால் அது நியாயம் தான்!

இப்போது எங்கு பார்த்தாலும் விதவிதமான ஏ.சி.கள் விற்பனைக்கு உள்ளன. நீங்கள் விரும்பும் அளவுக்கு அறையை குளிற வைக்கும் ஏ.சி., காற்றை சுத்தமாக்கும் ஏ.சி. என்று எத்தனையோ....

நீங்கள் வாங்கும் ஏ.சி. புதிது, உபயோகித்தது, பிராண்டட், அசம்பிள்டு என்று எதுவாக இருந்தாலும் சில குறிப்புகளை நினைவில் வைப்பது நல்லது.

ஜன்னலில் பொருத்தக் கூடியவை:

ஜன்னலின் கீழ் பாகத்தில் இது எளிதாக பொருந்திவிடும். இதற்காக சுவரை உடைக்க வேண்டிய அவசியமில்லை.

இதை எளிதாக கழற்றவும், மாட்டவும் முடியும். அதனால் வாடகைக்கு ஏ.சி. வாங்கினாலும், வாடகை வீட்டில் பொருத்த வாங்கினாலும், இதுவே சிறந்தது.

சுவரில் பொருத்தக் கூடியது:

இவை பார்ப்பதற்கு அழகானவை. ஆனால் விலை கொஞ்சம் கூடுதல்.

ஜன்னலை ஏ.சி.யால் அடைக்க விரும்பாதவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். வேண்டிய இடத்தில் பொருத்தலாம்.

வீட்டுக்கு சொந்தக்காரர்கள் சுவரில் துளை போட அனுமதிப்பார்களா என்பதை வாடகை வீட்டில் இருப்பவர்கள் யோசிக்க வேண்டும்.

ஜன்னலில்/சுவரில் பொருத்தக் கூடியது:

வாடகை வீட்டில் இருக்கும்போது, ஜன்னலில் பொருத்திக் கொள்ளலாம். சொந்த வீட்டுக்கு மாறியவுடன் சுவரில் பொருத்தலாம்.

ஜன்னலிலும், சுவரிலும், பொருந்தக் கூடியது என்பதால் இது பலரால் விரும்பப்படுகிறது. ஆனால் இதன் விலையும் அதிகம்.

கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

தேவையான அளவு அறை குளிர்ந்த பிறகு பொதுவாக கம்ப்ரெஸ்ஸர் வேலை செய்வதை நிறுத்திவிடும். ஆனால் ஏ.சி.க்கு உள்ளே இருக்கும் விசிறி வேலை செய்வதால் மின் கட்டணம் ஏறிக்கொண்டே போகும். கம்ப்ரெஸ்ஸர் நிற்கும் போது விசிறியும் நிற்பது போன்ற வசதி உள்ளதா என்று கவனிக்கவும்.

ஆஸிலேடிக் வெண்ட்ஸ் இருந்தால் வெளியே வரும் குளிர்ந்த காற்று அறை முழுக்க சீராக பரவும்.

ரிமோட் கன்ட்ரோல் வசதி இருந்தால் உட்கார்ந்தபடியே ஏ.சி.யை இயக்கலாம்.

டைமர் இருந்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏ.சி.யை இயக்கவும் நிறுத்தவும் முடியும்.

ஒன்று அல்லது இரண்டு வருடம் நிறுவனத்தின் உத்தரவாதம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வேறு ஒரு ஏ.சி.யை வாங்குவதே நல்லது.

மிக்ஸி பராமரிப்பு

1. வோல்டேஜ் அதிகமாகவோ அல்ல‍து குறைவாகவோ இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும்.

2. ஜாரில் 3ல் 2 பங்கு தான் நிரப்ப வேண்டும். அதிகம் போட்டால் விரைவாக பழுது ஏற்படும்.

3. அரிசி மாவு கெட்டியாகத் தேவைப் படும் போது அரிசியைக் கெட்டியாக அரைப்பதாலும் மிக்ஸி கெட்டுவிடு ம்.

4. ஜாரில் போட்டு அரைத்ததும் உட ன் அதில் தண்ணீர் ஊற்றி ஸ்லோ ஸ்பீடில் வைத்து அலம்பித் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத் திரம் கழுவும்போது பாத்திரத்தோடு கழுவலாம் எனப்பாத்திரத்தோ டு சேர்த்துப் போடக் கூடாது.

5. மிக்ஸி பிளேடுகளை சாணை பிடிக்கவே கூடாது. மிக்ஸி பிளே டுகள் மோட்டாரின் வேகத்தைப்பொறுத்தே நைசாக அரைக்கும்.

6. மிக்ஸின் பிளேடுகள் மழுங்கிவிட்டால் கல் உப்பை ஒரு கை எடுத்து மிக்ஸி யில் போட்டு ஒரிரு நிமிடங்கள் ஓட்ட வும். பிளேடுகல் கூர்மையாகிவிடும்.

7. ஜார்களில் அடிப்பகுதி ரிப்பேர் ஆகி அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தா ல் உடன் ஜாரை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டுவிடும்.

8. சூடான பொருள்களை மிக்ஸியில் அரைக்கக் கூடாது.

9. மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவ னித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.

10. மிக்ஸி ஓடும்போது மூடியைக் கை யினால் அழுத்திக் கொள்ள வேண்டும்.

11. அரைக்கும்போது பிளேடுகள் லூசாகி உள்ளதா என்பதைக் கவனித்து டை ட்டு செய்து கொ ள்ள வேண்டும்.

12. மிக்ஸியில் ஜாரின் அடிப் பாகத்தில் ரப்பரால் ஆன இணைக்கும் பகுதி அதற் கென்று மிக்ஸியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளமான பாகத்துடன் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் இல்லையெனில் மிக்ஸி பழுதா கிவிடும்.

13. அரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர்விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டா ர் எரியவோ நேரலாம்.

14. மிக்ஸி ஒடும் போது திறந்து பார்க்கக் கூடாது.

15. இட்லிக்கு மிக்ஸியில் புழுங் கல் அரிசி அரைக்கும் போது இர வே ஊற வைத்துவிட்டால் மிக சிக்கிரமாக அரைத்து விடலாம். மிக்ஸி சூடாவதையும் தடுக்கலாம்.

https://vidhai2virutcham.wordpress.com/2012/08/01/மிக்ஸி-பராமரிப்பு/

சனி, 8 செப்டம்பர், 2012

கையைக் கடிக்குதா கரண்ட் பில்?

கரன்ட் ஷாக் அடிச்சு யார் உணர்ந்திருக்காங்களோ இல்லையோ, கரன்ட் பில்லைப் பார்த்து ஷாக்கடிச்சு விழுந்தவங்க ஏராளம்! ஓலை விசிறியும் குண்டு பல்ப்புமா இருந்த வாழ்க்கையா இன்னைக்கு இருக்குது! டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர்னு ஐயிட்டங்கள் பெருகிக்கிட்டே போக, கரன்ட் பில்லும் எகிறிக்கிட்டே போகுது. பழையபடி ஓலை விசிறிக்கு இனிமே போக முடியாது. ஆனா, குறைந்தபட்சம் மின்சாரத்தை அளவா செலவழிக்கிறது எப்படிங்கிற விஷயமாவது தெரிஞ்சா, கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். அதுக்கு என்னென்ன செய்யணும்?

கணக்குமுக்கியம்!

ஒருயூனிட்டுக்கு இவ்வளவு இவ்வளவு ரூபாய்னு நமக்கு பில் போடுது மின்சாரவாரியம். ஒரு யூனிட் அப்படிங்கிறது எப்படி கணக்கிடப்படுதுன்னுதெரிஞ்சாதான் மின்சாரத்தை எப்படிச் சேமிக்கலாம்ங்கிறதும் புரியும். 1,000வாட்ஸ் பல்ப் ஒரு மணி நேரம் இயங்கினா அது ஒரு யூனிட். அதுவே 500 வாட்ஸ்பல்ப்னா ரெண்டு மணி நேரம். 40 வாட்ஸ் பல்ப் 25 மணி நேரம் இயங்கினா அது ஒருயூனிட். ஆக, நாம வாங்குற அல்லது பயன்படுத்துற ஒவ்வொரு மின்சாதனத்தையும் ஒரு நாளைக்கு எத்தனை மணி பயன்படுத்துவோம், அதுக்கு எத்தனை வாட் மின்சாரம் செலவு ஆகும்ங்கிற விஷயத்தை மனசுல உள்வாங்கினாலே போதும், கரன்ட் பில்சரசரனு தானாவே குறைய ஆரம்பிச்சிடும்.

ஸ்டார்ரேட்டிங்!

மின்சாரத்தைசிக்கனமா பயன்படுத்துற வழிமுறைகளைப் பின்பற்றுவதைவிட குறைவான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் பொருட்களை வாங்குறதே புத்திசாலித்தனம். ரெஃபிரிஜிரேட்டர், ஏ.சி. மாதிரியான பொருட்களை வாங்குறப்போ கண்டிப்பா ஸ்டார்ரேட்டிங் பார்த்துதான் வாங்கணும். இந்த ஸ்டார் ரேட்டிங்கைத் தேடி எங்கேயும் அலைய வேண்டியதில்லை. எல்லா மின்சார சாதனங்களிலும் அதிலேயே போட்டிருக்கும். அதிக ஸ்டார் ரேட்டிங் உள்ள பொருட்களுக்கு குறைவானமின்சாரமே தேவைப்படும். (அதிகபட்சம் 5 ஸ்டார் ரேட்டிங்) ஆனா அதோட விலைகொஞ்சம் அதிகமா இருக்கும்! ‘அய்யோ விலை அதிகமா இருக்கே’னு அதை வாங்காமவிட்டுடாதீங்க. ரேட்டிங் குறைஞ்ச பொருளை வாங்கி, அதிகமா கரன்ட் பில்கட்டுறதோட ஒப்பிட்டுப் பார்த்தா இந்த விலை ஒண்ணும் அவ்வளவு பெருசாஇருக்காது. இனி ஒவ்வொரு மின் சாதனத்திலும் எப்படி மின்சாரத்தைச்சேமிக்கலாம்னு பார்ப்போம்…

ரெஃபிரிஜிரேட்டர்!

24 மணி நேரமும் ஓடும் ரெஃபிரிஜிரேட்டரில் என்ன சேமிக்க முடியும்னு நினைக்கிறீங்களா, நிறைய சேமிக்க முடியும்!ஃப்ரிட்ஜைஅடிக்கடி திறந்து மூட வேண்டாம். உள்ளே வைக்கும் ஒவ்வொரு பொருளையும் அப்படியே வைக்காமல், ஒரு பையில போட்டு மூடி வையுங்கள். மூடாம அப்படியேவச்சா ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால் அதிக மின்சாரம் தேவைப்படும்.சூடான பொருளை அப்படியே உள்ளே வைக்க வேணாம். அது சாதாரண வெப்பநிலைக்கு வந்த பிறகு உள்ளே வைக்கவும்.அதேமாதிரி சும்மா சும்மா ஆஃப் பண்ணாதீங்க. குறைந்தபட்சம் ஒரு நாள் ழுக்கபயன்படுத்தப் போறதில்லை அப்படின்னா மட்டும் ஆஃப் செய்யவும். அணைத்து விட்டுமூணு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பவும் ஆன் செஞ்சா அதிக மின்சாரம்தேவைப்படும்.

ஃபிரிட்ஜை சுவரோட ஒட்டி வைக்காம குறைந்தபட்சம் 20சென்டி மீட்டராவது தள்ளி வைக்கலாம். இப்படி வைக்கிறதால சூடான காற்றைசுலபமாக வெளியேற்ற முடியும். சுவரை ஒட்டி வைத்தால் சூடான காற்றை வெளியேதள்ள அதிக சக்தி தேவைப்படும். இந்த அதிக சக்திதான் அதிக மின்சாரம்.

ஏ.சி.!

எல்லா கதவுகளும் நல்லா மூடியிருக்கான்னு செக் பண்ணிட்டு அதுக்குப் பிறகு ஏ.சி.யை ஆன் செய்யவும்.ரூமோட ஈரப்பதத்தை (humidity) குறைவாவே வச்சிருக்கணும்.ரூம்கதவு ஜன்னல்களில் ஓட்டை இல்லாமல் பார்த்துக் கொள்ளணும். ஓட்டை இருந்தாவெளியிலிருந்து சூடான காற்று வரும் பட்சத்தில், அறையை குளுமையாக்க கூடுதல்மின்சாரம் தேவைப்படும்.அறையின் அளவுக்கு ஏற்றமாதிரிதான் ஏ.சி.யை செலக்ட் பண்ணணும். பெரிய ரூமுக்கு குறைந்த டன் ஏ.சி. போட்டால் அதிக மின்சாரம் தேவைப்படும்.

அறையின் அளவு – ஏ.சி. யின் அளவு
100 சதுர அடி வரை 1 டன்
100 முதல் 150 சதுர அடி வரை 1.5 டன்
150 சதுர அடிக்கு மேல் 2 டன்

வாட்டர்ஹீட்டர்!

தேவைப்படும்நேரத்துக்கு சற்று முன்பாக மட்டும் வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யவும். தெர்மோஸ்டட் இருக்கிறது, தண்ணீர் சூடானால் தானாகவே நின்றுவிடும்னு நினைக்கவேணாம். தண்ணீரின் சூடு குறைஞ்ச பிறகு மீண்டும் ஹீட்டர் தானாவே செயல்படஆரம்பிக்கும். அதனால கூடுதல் மின்சாரம் தேவைப்படும். ஒரு ஆள்தான்குளிக்கப் போறாங்கன்னா தெர்மோஸ்டட் மூலமா ஆஃப் ஆகுற வரை காத்திருக்கவேணாம். கொஞ்ச நேரத்திலேயே அணைத்துவிடவும்.

பல்ப்!

குண்டுபல்ப்புகளை (incandescent lamp) கண்டிப்பா பயன்படுத்த வேணாம். அதுக்குஅதிக வாட் தேவைப்படும். அது மட்டுமல்லாமல் குண்டு பல்ப் மின்சக்தியை வெப்பசக்தியாக மாற்றிதான் வெளிச்சத்தைக் கொடுக்குது. ஆனால் சி.எஃப்.எல். (compact fluorescent lamps) மின்சக்தியை நேரடியாவே ஒளிசக்தியாகமாற்றுகிறது.படிக்கும் போது ரூம் முழுவதற்கும் வெளிச்சம் தர்றமாதிரி பெரிய விளக்குகளை பயன்படுத்துறதை விட டேபிள் விளக்குகளைப்பயன்படுத்த லாம். 40 வாட் டியூப் லைட்களைவிட 36 வாட் ஸ்லிம் டியூப்களைபயன் படுத்தலாம்.

அயர்ன்பாக்ஸ்!

தினமும் ஒவ்வொரு துணியா அயர்ன் பண்ண வேண்டாம். மொத்தமா ஒரு வாரத்துக்குத் தேவையான துணிகளை எடுத்து அயர்ன் செய்யவும்.

மின்விசிறிகள்!

எலெக்ட்ரானிக் ரெகுலேட்டர்களையே பயன்படுத்தவும். இதன் ஆயுட்காலம் குறைவுன்னாலும் நமக்குத் தேவைப்படும் வேகத்தில் வைத்துக் கொள்ள முடியும். பழையரெகுலேட்டர்களோடு ஒப்பிடும் போது எலெக்ட்ரானிக் ரெகுலேட்டரே சிறந்தது. மின்விசிறியின் இறக்கைகளை சுத்தமாக வைத்திருக்கவும். இறக்கை மீது அதிகதூசி படர்ந்து அழுக்கேறும் போது அதன் எடை கூடும். சுழல அதிக மின்சாரமும் தேவைப்படும்.

புதன், 5 செப்டம்பர், 2012

கிரைண்டர் பராமரிப்பு முறைகள்!


• தானியங்கள் எதுவும் போடாமலோ, சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.

• கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும்.

• கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல இருக்கும்.

• முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும்.

• கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடும்.

• குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும்.

• கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால், எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயமுள்ளது. ஆகையால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்க வேண்டும்.

• கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது.

• கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் வழ வழ என்று இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.

• கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும்.

• மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.

• கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது வாரண்டி என்றால்?

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!

பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மேலே சொன்ன ‘லாப்_டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனை’ ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி_வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.

நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’

யார் நுகர்வோர்?

தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.

கரண்ட் பஞ்ச்

க‌ரண்ட் ஷாக் அடித்தால் செய்ய‍ வேண்டிய முதலுதவி என்ன?



உங்கள் அருகில் இருப்ப‍வருக்கு கரண்ட் ஷாக் அடித்தால் பதறாமல் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி பாதிக்க‍ப்பட்ட‍வரை காப்பாற் ற‍லாம்.

சுவிட்ச் போடும்போது, ஷாக் அடித்தி ருந்தால், மரத்தினாலான பொருட்க ளை பயன்படுத்தி சுவிட்சுக்கும், கைக்கும் இடையேயான தொடர்பை நீக்கிவிடவேண்டும் பாதிக்க‍ப்பட்ட‍வ ரை, நேரிடையாக உங்கள் கைகளா ல் தொடாமல், தரையில் படுக்க வை யுங்கள்.

மெயின் சுவிட்சை, உடனடியாக நிறு த்தி விடுங்கள்.

பாதிக்கப்பட்டவரின் உடைகளை தளர்த்தி, காற்றோட்டமாக இருக்கும் படி செய்ய‍வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது. ஷாக்கின் பாதிப்பு சற்று அதிகமாக இருந்து, வாந்தி எடுக்கு ம் நிலையில் இருப்பவரை, கால்கள் தரையில் இருந் து ஒரு அடி உயரத்தில் இருக்கும்படி மல் லாக்காக படுக்க வைக்க வேண்டும்.

மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப்படி அதற்கான சிகிச்சை முறைகளை அளிக்க‍வேண்டும்.

மின்சாதனங்கள்.. உஷார் டிப்ஸ்!

‘மின்சாரம் இல்லாமல் இன்றைய வாழ்வே இல்லை. நமக்கு வரமாகக் கிடைத்திருக்கிற மின்சாரத்தை, சாபமாக்கிக் கொள்ளாமல் அதை சரியாகப் பயன்படுத்தும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள். மின்சாதனப் பொருள்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறதா என்று பார்த்தே மின்சாதன பொருட்களை வாங்குங்கள்.  மூன்று பின்கள் உள்ள பிளக்&ஐயே பயன்படுத்துங்கள். ஸ்விட்ச் பாக்ஸ் தரைமட்டத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு மேல் இருக்கும்படி பொருத்துங்கள். விபரம் தெரியாத குழந்தைகளின் பாதுகாப்புக்கு இதுவே சிறந்த வழி.

ஸ்விட்ச் பாக்ஸை பொறுத்தவரை பாதுகாப்பான நிறைய வகைகள் இப்போது கிடைக்கின்றன. உதாரணமாக, பிளக்&ல் ‘பின்’ செருகும்போது துவாரப் பகுதி திறந்தும், பின்&ஐ வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான க்ளோசிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவை மிகவும் பாதுகாப்பானவை.  டி.வி, ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற மின்சாதனப் பொருட்களுக்கு ஸ்டெபிலைசர் வைப்பது மிகவும் பாதுகாப்பானது.  மின்சாதனங்களை பயன்படுத்தும்போது கவனிக்க-வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர்.

முக்கியமான மின்சாதனங்களுக்கு (ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், டி.வி. போன்றவை..) தனித் தனியாக ‘எர்த் கனெக்ஷன்’ கொடுப்பது பாதுகாப்பானது. எர்த் கொடுக்கும் போது அது சரியான முறையில் (ஆறடிக்குக் குறையாத ஆழம் தோண்டி, உள்ளே கரித்துகள்கள், உப்பு, ஆற்று மணலைப் போட்டு ‘எர்த்’ கொடுக்கவேண்டும்). கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவேண்டும். எர்த் கொடுத்த இடத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது எர்த் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.

பிளாட்ஃபார கடைகளில் மின்சார பொருட்களை வாங்கவே கூடாது. தரமான ப்ராண்டட் பொருட்களை உபயோகிப்பதே சிறந்தது. மின்சாதனங்கள் பழுதுபட்டால், அவற்றுக்குரிய நிறுவனங்களில் கொடுத்துத்தான் சரிசெய்ய வேண்டும்.  வெவ்வேறு மின்சாதன பொருட்களுக்கு தனித் தனி ‘பின்’களையே பயன்படுத்தவேண்டும். ஒரே பின்&ல் பல ‘பிளக்’குகளை செருகிவைக்கக் கூடாது. தீய்ந்துபோன ஸ்விட்ச்சுகளை பயன்படுத்துவது, ஒயரை சீவிவிட்டு பின்னுக்குள் செருகி வைப்பது போன்றவற்றை செய்யவே கூடாது. சில சமயங்களில் ஸ்விட்ச் பாக்ஸில் கரையான் கூடு கட்டியிருக்கும். மழைக்காலத்தில் அது ஈரப்பதமாகி, விபத்து நிகழ அதிக வாய்ப்புண்டு. எலெக்ட்ரீஷியனை அழைத்து, கரையான் கூட்டை எடுத்துவிட வேண்டும்.

லேசாக ஷாக் வருகிற மாதிரி தெரிந்தால்கூட, சரி செய்யாமல் அப்பொருளை பயன்படுத்தவே கூடாது.  கிரைண்டர், மிக்ஸி, கெய்ஸர், ஹீட்டர் (தண்ணீருக்குள் போட்டு சூடு செய்யும் கருவி), டேபிள் ஃபேன் உள்ளிட்ட பொருட்களை துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துருவின் மூலமாக வெளியே மின்சாரம் கசியக் கூடும்.  மின்பழுதுகளை சரிசெய்ய லைசன்ஸ் வாங்கிய எலெக்ட்ரீஷியன்களையே அழைக்க வேண்டும். நமது சொந்தத் திறமைகளை பரிசோதிக்கும் இடம் அது இல்லை என்பதையும் உணர வேண்டும். தொடர்ந்து ஒரே எலெக்ட்ரீஷியனையே கொண்டு பழுது பார்ப்பது நல்லது. அவருக்கு வீட்டின் மின் கட்டமைப்பு நன்கு தெரிந்திருக்கும் என்பதால், குறைபாட்டை முழுவதுமாக சரிசெய்ய முடியும்.

பாத்ரூமில் ஈரப்பதம் இருந்து கொண்டேயிருப்பதால், அங்கு பயன்படுத்தப்படும் மின்சாதனங்களுக்கான ஸ்விட்ச் பாக்ஸ் வெளியில் இருக்கவேண்டியது அவசியம். ஹீட்டர், கெய்ஸரை நிறுத்திய பின்னரே குளிக்கச் செல்ல வேண்டும்.  கூடுதல் பாதுகாப்புக்கு E L C B ( Earth Leaker Circle Breaker) என்ற கருவியை மெயின் &ல் பொருத்திக் கொள்ளலாம். எங்காவது சின்ன மின்கசிவு இருந்தால்கூட மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரண்டே நிமிடத்தில் மீண்டும் அதுவாகவே ‘ஆன்’ ஆகிவிடும் வசதி இந்தக் கருவியில் உண்டு. இந்த சிக்னலால் மின்கசிவைக் கண்டுபிடித்து உடனடியாக சரி செய்துவிடலாம்.’’

மின் தாக்குதலுக்குள்ளானவரின் அருகிலிருப்பவர் செய்யவேண்டிய முதலுதவிகள் பற்றிச் சொல்கிறார் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் கணேசன்.  மின்சாரம் தாக்கியவரை தொடவே கூடாது. மின்சாரம் பாயாத ரப்பர், மரக்கட்டை முதலான பொருட்களைக் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லையெனில், மெயினை ஆஃப் செய்து மின்சாரத்தை நிறுத்தவேண்டும்.

மின்சாரம் தாக்கியவர் நினைவின்றி இருக்கும்போது அவருக்கு உடனடியாக தண்ணீர் கொடுக்கக் கூடாது.அப்படிச் செய்தால், தண்ணீர் சுவாசக் குழாய் வழியாகச் சென்று மேலும் பிரச்னைகள் ஏற்படும். மின்சாரத்தால் தீக்காயம் ஏற்பட்டிருந்தால், காயத்தின் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவேண்டும். மின்கசிவு உள்ள இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதில் காலை வைக்கவே கூடாது.  ஈரம் உள்ள இடத்தில் மின்கசிவு இருப்பின், எத்தனை அவசரமாக இருந்தாலும் ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தான் அருகில் செல்ல வேண்டும்.

மின்சாரம் உடலில் பாய்ந்த உடன் இதயம் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது. அதனால், இடது மார்புப் பகுதியை அழுத்தி இதயத்தை இயங்கச் செய்யவேண்டும். அந்த நபர் மூர்ச்சையாகியிருந்தால், வாய் வழியாக செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். பிறகு வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளாதவாறு நீளமான பொருளில் அல்லது ஒரு ஸ்பூனில் துணியைச் சுற்றி பற்களுக்கு இடையே வைத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.