புதன், 12 செப்டம்பர், 2012

மிக்ஸி பராமரிப்பு

1. வோல்டேஜ் அதிகமாகவோ அல்ல‍து குறைவாகவோ இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும்.

2. ஜாரில் 3ல் 2 பங்கு தான் நிரப்ப வேண்டும். அதிகம் போட்டால் விரைவாக பழுது ஏற்படும்.

3. அரிசி மாவு கெட்டியாகத் தேவைப் படும் போது அரிசியைக் கெட்டியாக அரைப்பதாலும் மிக்ஸி கெட்டுவிடு ம்.

4. ஜாரில் போட்டு அரைத்ததும் உட ன் அதில் தண்ணீர் ஊற்றி ஸ்லோ ஸ்பீடில் வைத்து அலம்பித் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத் திரம் கழுவும்போது பாத்திரத்தோடு கழுவலாம் எனப்பாத்திரத்தோ டு சேர்த்துப் போடக் கூடாது.

5. மிக்ஸி பிளேடுகளை சாணை பிடிக்கவே கூடாது. மிக்ஸி பிளே டுகள் மோட்டாரின் வேகத்தைப்பொறுத்தே நைசாக அரைக்கும்.

6. மிக்ஸின் பிளேடுகள் மழுங்கிவிட்டால் கல் உப்பை ஒரு கை எடுத்து மிக்ஸி யில் போட்டு ஒரிரு நிமிடங்கள் ஓட்ட வும். பிளேடுகல் கூர்மையாகிவிடும்.

7. ஜார்களில் அடிப்பகுதி ரிப்பேர் ஆகி அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தா ல் உடன் ஜாரை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டுவிடும்.

8. சூடான பொருள்களை மிக்ஸியில் அரைக்கக் கூடாது.

9. மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவ னித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.

10. மிக்ஸி ஓடும்போது மூடியைக் கை யினால் அழுத்திக் கொள்ள வேண்டும்.

11. அரைக்கும்போது பிளேடுகள் லூசாகி உள்ளதா என்பதைக் கவனித்து டை ட்டு செய்து கொ ள்ள வேண்டும்.

12. மிக்ஸியில் ஜாரின் அடிப் பாகத்தில் ரப்பரால் ஆன இணைக்கும் பகுதி அதற் கென்று மிக்ஸியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளமான பாகத்துடன் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் இல்லையெனில் மிக்ஸி பழுதா கிவிடும்.

13. அரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர்விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டா ர் எரியவோ நேரலாம்.

14. மிக்ஸி ஒடும் போது திறந்து பார்க்கக் கூடாது.

15. இட்லிக்கு மிக்ஸியில் புழுங் கல் அரிசி அரைக்கும் போது இர வே ஊற வைத்துவிட்டால் மிக சிக்கிரமாக அரைத்து விடலாம். மிக்ஸி சூடாவதையும் தடுக்கலாம்.

https://vidhai2virutcham.wordpress.com/2012/08/01/மிக்ஸி-பராமரிப்பு/

கருத்துகள் இல்லை: