வியாழன், 20 டிசம்பர், 2012

ஒரு சின்ன வரலாறு மின்னியல்(Electricity) பற்றி:-

6 ஆம் நூற்றாண்டு

மின்சாரம் கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் தேல்ஸ் என்ற தத்துவவியலாளரின் குறிப்பின் மூலம் நாம் இதை அறியலாம். தேல்ஸ் அவர் மாணவர்களுக்கு இச்சோதனையை நடத்திக்காட்டுவாராம். அவர் அம்பரைக் கம்பளியால் நன்கு தேய்ப்பார், அப்பொருது அம்பரிருந்து 'கிரிக் கிரிக்' என்ற சத்தம் எழும், பின்பு அவர் அம்பரை குவிக்கப்பட்டுள்ள சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வைக்கோல் அல்லது மர இழைகள் மீது ஒரு செமீ மேல் பிடிப்பார், அப்போது வைக்கோல் அல்லது மர இழைகள் அம்பரை நோக்கித் துள்ளும். இருட்டான அறையில் இச்சோதனையை நடத்தினால், சில நேரங்களில் அம்பரில் இருந்து தீப்பொறிகள் எழும். இலத்தீனில் அம்பரை எலக்டிரான் என்ழழைப்பர். இச்சொல்லே திரிந்து மின்சாரத்தை ஆங்கிலத்தில் "எலட்டிரிசிட்டி" என அழைக்கின்றனர். தேல்ஸ் கண்டுபிடித்த மின்சக்தியை நாம் இப்பொழுது நிலை மின்சக்தி என அழைக்கிறோம்.

1720 ல்:- ஸ்டீபன் கிரெ(Stephen Gray) என்பவர் நிலை மின்னூட்டங்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கடத்தமுடியும் என நிரூபித்தார்

1750 ல்:- பெஞ்ஜமின் பிராங்க்ளின் அவர்க்ளின் ஒரு Fluid theory of Electricity மின்னியலின் ஆறிவியல் பூர்வமான செயல்முறைகளை ஒருமுகப்படுதியது. இதுவே புதிய மின்னியல் அடிப்படைக் கொள்கைகள்உருவாக அடித்தளம் அமைத்தது.

1800ல்:- அலெஸ்ஸான்ட்ரோ வொல்டா அருடைய புதிய கண்டுபிடிப்பாக மின்கலத்தை மீண்டும் பாரசீகர்களுக்கு பின் 1800 ஆண்டுகள் களித்து அறிமுகப்படுதினார்.

1820ல்:- ஹான்ஸ் ஓர்ஸ்டட் மின்காந்த தன்மையை தன்னுடைய பிரபலமான "காம்பஸ்(Compus) மற்றும்மின்சாரம் பாயும் கடத்தி"(current carying wire) சோதனை மூலம் கண்டறிந்தார்.

ஆண்ட்ரு -மேரி ஆம்பியர் மின்சாரம் மற்றும் மின்காந்தம் இவற்ரை வரையறை செய்தார். மேலும் மின்னோட்ட்டத்தை அளவிடும் "அம்மீட்டர்" என்னும் கருவியையும் கண்டறிந்தார்.

ஜார்ஜ் ஓம் மின்சாரம் பறிய ஆய்வுகளை வெளியிட்டார், அதில் அவரது புகழ் பெற்ற ஓம்'ன் விதி (Ohm's law) யும் அடக்கம்.

1830ல்:- மைக்கெல் பாராடெ ஆட்டத்தில் இறன்கினார். மனிதகுலதின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்த நவீன மின்னிய்ல் யுகம் தொடங்கியது....!

" No Cithy with out Electricity"


இன்னும் வரும்...

கருத்துகள் இல்லை: