சனி, 19 ஜனவரி, 2013

குளிர்சாதனைப்பெட்டி

ஒருமுறை வாங்கி, பல முறை பயன்படுத்தப்படும் பொருள் ஃப்ரிட்ஜ் என்ற ரெஃப்ரிஜிரேட்டர். எந்தெந்த பிராண்டுகளில் என்னென்ன வகை ஃப்ரிட்ஜுகள் கிடைக்கின்றன? விலை என்ன? எப்படிப் பராமரிப்பது?… இதோ உங்களுக்கான வழிகாட்டி! 

வெர்ல்பூல், எல்.ஜி., சாம்ஸங், காத்ரேஜ், கெல்வினேட்டர், வீடியோகான், எலெக்ட்ரோலக்ஸ், ஹேயர்… இப்படி ஏகப்பட்ட பிராண்ட்… 180 லிட்டரிலிருந்து 400 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட விதம்விதமான ஃப்ரிட்ஜுகள் மார்க்கெட்டில் உள்ளன. 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 180 லிட்டர் கொள்ளளவைத் தாங்கும் ஃப்ரிட்ஜ் போதுமானது.
பிராண்டுகளும் விலைகளும் தோராயமாக… (180 லிட்டர்)

எல்.ஜி. ரூ.11,000
சாம்ஸங் ரூ.10,800
வெர்ல்பூல் ரூ.11,500
கெல்வினேட்டர் ரூ.9,500
வீடியோகான் ரூ.9,000
எலெக்ட்ரோலக்ஸ் ரூ.9,850
ஹேயர் ரூ. 9,450
காத்ரேஜ் ரூ.9,500

டைரக்ட் கூலிங் வசதியுள்ள சிங்கிள் டோர், ஃப்ராஸ்ட் ஃப்ரீ வசதி கொண்ட டபுள் டோர், ட்ரிபிள் டோர், பல வசதிகள் கொண்ட சைடு பை சைடு டோர்… இப்படி பல வகைகளிலிருந்து நம் தேவை, பயன்பாட்டுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம். இதே போல 190, 195, 200 லிட்டர் அளவுகளிலும் ஃப்ரிட்ஜுகள் கிடைக்கின்றன.

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ‘ஸ்டார் ரேட்டிங்’. மின்சாரம் பயன்படுத்தும் பொருட்களில் நல்ல ஸ்டார் ரேட்டிங் இருந்தால் அது மின்சாரச் செலவைக் குறைக்கும் என்று அர்த்தம். ஃப்ரிட்ஜுகளில் வகைக்கு ஏற்ப, ஒன்றிலிருந்து 5 வரை ஸ்டார் இருக்கும்.

ஐஸ் அதிகம் தேவைப்படுபவர்களுக்காக வெர்ல்பூல் பிராண்டில் ‘ஐஸ் மேஜிக் ஃப்ரிட்ஜ்’ இருக்கிறது. சிங்கிள் டோர் வசதி கொண்ட இந்த ஃப்ரிட்ஜை நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆட்டோமேட்டிக்காக தானே க்ளீன் செய்து கொள்ளும் வகையில் அதே வெர்ல்பூல் பிராண்டில் ‘ஐ-மேஜிக்’ ஃப்ரிட்ஜ் புதிதாக வந்திருக்கிறது. இதன் விலை ரூ.13,500. சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜுகளைப் பொறுத்தவரை ஃப்ரீசரும் உள்ளேயே இருப்பதால் சுத்தமாக வைத்திருப்பது அதற்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

6 முதல் 8 பேர் கொண்ட குடும்பத்துக்கு 230 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்ரிட்ஜ் தேவைப்படும். டபுள் டோர் வசதி கொண்ட இந்த வகைகளில் ‘ஆட்டோமேடிக் க்ளீன்’ வசதி இருக்கிறது.

பிராண்டுகளும் விலைகளும் தோராயமாக… (230 லிட்டர்)

எல்.ஜி. ரூ.15,350
சாம்சங் ரூ.16,250
காத்ரேஜ் ரூ.15,850
வெர்ல்பூல் ரூ.16,500

டபுள் டோர்களில் 245, 255, 260 லிட்டர் கொள்ளளவுகளில் கிடைக்கின்றன. 3 கதவுகள் கொண்ட ஃப்ரிட்ஜ் வகைகளில் காய்கறிகளை ஸ்டோர் செய்யும் வசதியும், தனியாக ஃப்ரீசரும் இருக்கும். வெர்ல்பூல், ஹிட்டாச்சி பிராண்டுகளில் இந்த வகை ஃப்ரிட்ஜுகள் கிடைக்கின்றன. 20 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது விலை.

ஸ்டோரேஜ் வசதி அதிகம் தேவைப்படுபவர்களுக்காகவே பிரத்யேகமாக பெரிய சைஸ் கதவுகளோடு, கிராண்ட் லுக் தரும் ஃப்ரிட்ஜுகள் எல்.ஜி.யில் கிடைக்கும். விலை ரூ.50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல். எல்.ஜி. பிராண்டில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான ஃப்ரிட்ஜ் அறிமுகமாகி இருக்கிறது. லிநி நிசி வி237 கிநிழிழி என்கிற இந்த மாடலில் வொண்டர் டோர் சீரிஸ், 679 லிட்டர் கொள்ளளவு வசதி, ஐஸ்கட்டிகளை சீக்கிரம் உருவாக்கும் வசதி என பல சிறப்பம்சங்கள். உள்புறம் 52 லிட்டர் அளவுகளில் தனித்தனி அறைகள்.

இதன் காரணமாக, ஃப்ரிட்ஜின் மெயின் டோரைத் திறக்காமல், குறிப்பிட்ட அறையில் இருந்து தேவைப்படும் பொருளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். நவீன வசதிகள் ஒருபுறம் இருந்தாலும், ஹெல்த் கார்டு டெக்னாலஜியின் அடிப்படையில் காற்றை சுத்தப்படுத்தும் வசதி உள்ளது. இதைப் பயன்படுத்தி உட்புறம் இருக்கும் தேவையில்லாத தூசுகள், பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், துர்நாற்றம் எல்லாவற்றையும் விரட்டி உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கலாம். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஃப்ரிட்ஜில் காய்கறி, பழங்கள் வைப்பதற்கென தனித்தனி அறைகள், ஆட்டோமேடிக் ஃப்ரீசர் வசதியும் இருக்கின்றன.

பவர்கட் நேரத்தில் இந்த ஃப்ரிட்ஜை இயக்குவதற்கென ஸ்பெஷல் இன்வெர்ட்டர் 10 வருட உத்தரவாதத்துடன் கிடைக்கிறது. இது, கூட்டுக் குடும்பத்தினருக்கும் புதுமை விரும்பிகளுக்கும் சரியான சாய்ஸ். விலை ரூ.1.25 லட்சம்.

ஒரு ஃப்ரிட்ஜ் நீண்டநாள் உழைக்க வேண்டுமானால் அதை எப்படிப் பராமரிக்க வேண்டும்? விளக்குகிறார் ஃப்ரிட்ஜ் மெக்கானிக் சுந்தரம்.

ஃப்ரிட்ஜ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று ஸ்டெபிலைஸர். தரமான, பிராண்டட் ஸ்டெபிலைஸர்களை பயன்படுத்துவது நல்லது. ஃப்ரிட்ஜில், ஃப்ரீசர் கதவுக்குப் பின்னால் என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதையும் பயன்படுத்தும் வழிமுறைகளையும் எழுதி வைத்திருப்பார்கள். முதலில் அதைத் தெளிவாகப் படித்து, அதில் குறிப்பிட்டிருக்கும்படி பயன்படுத்த வேண்டும்.  ஃப்ரீசரில் வைத்திருக்கும் பொருட்கள் நன்றாக உறைந்துவிட்டால் அவற்றை எடுப்பதற்குக் கூரான ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது. அது அமைந்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் அலுமினியம் காயில் பொருத்தப்பட்டிருக்கும். கூரான பொருட்களைப் பயன்படுத்தினால், காயில் மீது பட்டு உள்ளிருக்கும் கேஸ் வெளியேறிவிடும். அதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஃப்ரிட்ஜ் ரிப்பேரானாலோ, தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டாலோ உள்ளே இருக்கும் பொருட்களை வெளியில் எடுத்துவிடுங்கள். அடிக்கடி தடைப்படும் மின்சாரத்தால் உள்ளே இருக்கும் பொருட்கள் சீக்கிரமே அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும். இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், ஃப்ரிட்ஜை நன்றாகத் துடைத்து, எலுமிச்சைப் பழத்தை வெட்டி உள்ளே ஆங்காங்கே வைத்து விடவேண்டும். அதனால் துர்நாற்றம் மறையும். கிருமிகளின் பாதிப்பும் இருக்காது. 

ஃப்ரீசரில் இருந்து உறைந்த பொருட்களை எடுக்கும்போது டீஃப்ராஸ்ட் பட்டனை அழுத்த வேண்டும். அப்படி அழுத்தும் போது ஃப்ரிட்ஜில் அதிகப்படியாக இருக்கும் ஐஸ் கரைந்து, அதற்குப் பின்னால் உள்ள டிரேயில் விழுந்து விடும். 2 மாதங்களுக்கு ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்தால், ஃப்ரிட்ஜ் பழுதாகாமல் நீண்ட நாள் உழைக்கும். ஃப்ரிட்ஜை ஒரு தடவை ‘ஆஃப்’ செய்தால், உடனடியாக ‘ஆன்’ செய்யக் கூடாது. பேக்கிங் சோடா, காபித்தூளை ஃப்ரிட்ஜின் உட்புறம் வைத்தால் துர்நாற்றம் ஓடிவிடும். கேஸ்கட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாங்கிய நாலைந்து வருடங்களில் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்ந்துவிடும். இதனால் உட்புறம் இருக்கும் குளிர்ந்த காற்று வெளியேறிவிடும். பாக்டீரியாக்கள் உள்ளிட்ட கிருமிகள் கதவில் ஏற்பட்டிருக்கும் இடுக்கு வழியாக உள்ளே போய், கொஞ்சம் கொஞ்சமாக உணவுப் பொருட்களையும் பாதித்துவிடும். எனவே, கேஸ்கட்டை சரியாகப் பொருத்த வேண்டும். 

ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய சாதாரண சோப்புத் தண்ணீரைப் பயன்படுத்தினால் போதும். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சுத்தம் செய்த பிறகு, உட்புற அறைகளை துணியைக் கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வெளியூருக்குப் போகும் போது பொருட்களை எல்லாம் வெளியில் வைத்துவிட்டு, ஃப்ரிட்ஜை ஆஃப் செய்துவிடுவது நல்லது.

எந்த வகை ஃப்ரிட்ஜாக இருந்தாலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இடம் இருக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிக பொருட்களைத் திணிக்கக் கூடாது. ஒரு பொருளை எடுத்தால், உடனே ஃப்ரிட்ஜை மூடிவிட வேண்டும். இல்லையென்றால் உள்ளே இருக்கும் குளிர்ச்சி வெளியேறிவிடும். மறுபடியும் ஃப்ரிட்ஜைக் குளிர்விக்க அதிக மின்சாரம் தேவைப்படும்.

சுவருக்கும் ஃப்ரிட்ஜுக்கும் இடையில் குறைந்தது 6 இஞ்ச் தூரமாவது இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அதிகம் சூடாகாமல் இருக்கும். உள்பக்கமாக இருந்து வரும் காற்று வெளியேறவும் வசதியாக இருக்கும். கீரை, காலிஃப்ளவர் போன்றவற்றில் புழுக்களும் பூச்சிகளும் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவை மற்ற உணவுப் பொருட்களையும் பாதித்துவிடும். எனவே, அவற்றை காகிதத்தில் சுற்றி வைப்பது நல்லது. ஃப்ரிட்ஜின் மேல் பகுதியில் பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஃப்ரிட்ஜ் வைக்கும்போதே எர்த் சரியாக உள்ளதா என்று எலெக்ட்ரீஷியனைக் கொண்டு பரிசோதித்துக் கொள்ள வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை மெக்கானிக்கை அழைத்து வந்து ஃப்ரிட்ஜை சர்வீஸ் செய்து, பழுதில்லாமல் சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இருட்டைச் சமாளிப்பதற்குமான டிப்ஸ்கள் !!!!!

தவிர்க்கவே முடியாதது... தமிழகமும் மின் வெட்டும் என்றாகிவிட்டது!மின்சாரம் இருக்கும் நேரங்களில் அதை அதீதமாகச் செலவழிப்பது, மின் வெட்டு நேரத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே, மின் சிக்கனம் தேவை இக்கணம்.

டாஸ்க் லைட்டிங்’ எனும் முறையைப் பின்பற்றலாம். அதாவது, உங்கள் வேலைக்குத் தேவையான மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக, படுக்கை அறையில் புத்தகம் படிக்கும் சமயம், மொத்த அறைக்குமான விளக்கை ஒளிரவிடாமல், டேபிள் லேம்ப்பை மட்டும் பயன்படுத்துவது.

செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்தவுடன் அதன் ப்ளக்கை மின்சார இணைப்பில் இருந்து எடுத்துவிடுங்கள். என்னதான் சுவிட்சை ஆஃப் செய்தாலும், அதில் மின்சாரம் கடந்துகொண்டேதான் இருக்கும். அதனால் மின்சாரம் விரயமாவதுடன், மின் சாதனப் பொருட்களுக்குச் சேதமும் உண்டாகலாம்.

குளிர்சாதனப் பெட்டியின் 'கன்டென்சர் காயில்’-ஐ வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துங்கள். அதில் படியும் தூசி, குளிர்சாதனப் பெட்டியின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து 25 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.

மேஜை விளக்கினை அறையின் ஓரத்தில் வைக்கவும். அதனால், விளக்கின் ஒளி இருபுறச் சுவர்களிலும் பட்டு பிரகாசமாகப் பிரதிபலிக்கும்.

வீட்டு உபயோகத்துக்கு என்றால், 'டெஸ்க்டாப்’ கணினியைவிட லேப்டாப்பே சிறந்தது. லேப்டாப் கணினியைவிட டெஸ்க்டாப் கணினி ஐந்து மடங்கு அதிகமான மின்சாரத்தை உட்கொள்ளும். ஒருவேளை டெஸ்க்டாப் கணினி வாங்கினாலும், அதற்கு எல்.சி.டி. மானிட்டரையே தேர்ந்தெடுங்கள்.

கணினியில் ஸ்க்ரீன்சேவர்கள் வைத்தால், மின்சாரப் பயன்பாடு குறையும் என்பது தவறு. பயன்பாடு இல்லாத நேரத்தில், மானிட்டரை அணைத்துவிடுவதே சிறந்தது.

வாஷிங் மெஷினின் அதிகபட்சக் கொள்ளவுக்குத் துணிகளை நிரப்புங்கள்.

ப்ரிஜ்ஜின் குளிர்நிலையை 37 டிகிரி முதல் 40 டிகிரிக்குள் செட் செய்துகொள்ளுங்கள்.

திரவப் பொருட்களை மூடிவைத்து பிறகு ஃப்ரிஜ்ஜுக்குள் வைக்கவும். திறந்துவைத்தால், ஃப்ரிஜ்ஜுக்குள் ஈரப்பதம் அதிகமாகும். அதனால், அதிக வேலைப் பளு காரணமாக மின்சாரம் கூடுதலாகச் செலவாகும்.

டிஸ்போஸபிள் பேட்டரிகளைவிட ரீ-சார்ஜ் வசதியுள்ள பேட்டரிகளைப் பயன்படுத்தலாம்.
மின் வெட்டு சமயங்களைச் சமாளிக்க, சந்தையில் என்னவெல்லாம் பொருட்கள் கிடைக்கின்றன...

எமர்ஜென்ஸி ஃபேன்:

டூ இன் ஒன் அல்லது த்ரீ இன் ஒன் ஆகக் கிடைக்கிறது இந்த எமர்ஜென்ஸி ஃபேன். எமர்ஜென்ஸி விளக்கும் ஃபேனும் பொருத்தப்பட்டு இருக்கும் சாதனத்தின் விலை 650 முதல் 800 வரை. ஃபேன், விளக்கு மற்றும் எஃப்.எம். ரேடியோ ஆகியவை இணைந்த சாதனம் 1,000 முதல் 1,200 வரை. சார்ஜ் செய்துகொண்டு மின்சாரம் இல்லாத சமயங்களில் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் சாதனங்களை முழுமையாக சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு, ஃபேன், விளக்கு, எஃப்.எம். இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால், நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை இயங்கும். மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் ஒரு மணி நேரம் மட்டுமே சார்ஜ் நிற்கும்.

மொபைல் பவர் பேக்-அப்:
மின் வெட்டு சமயம் உங்கள் அலைபேசியை சார்ஜ் ஏற்றிக்கொள்ள உதவும் சாதனம் இது. மின்சாரம் இருக்கும் சமயம் இதை முழுக்க சார்ஜ் செய்துவிட வேண்டும். சுமார் மூன்று மணி நேரங்களில் இது சார்ஜ் ஆகிவிடும். பிறகு, மின்சாரம் இல்லாத சமயம் அலைபேசியில் இந்தச் சாதனம் மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இரண்டு அலைபேசிகளை இதன் மூலம் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதன் விலை 1,600 முதல் 2,000 வரை!

மினி இன்வெர்ட்டர்:
வழக்கமான இன்வெர்ட்டரின் மினி வடிவம். இதன் மூலம் லேப்டாப் இயக்கம், மொபைல் சார்ஜ் ஆகியவற்றின் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இதன் விலை 2,500 முதல் 3,500 வரை.

சோலார் லேம்ப்:
வெயிலில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருளைப் போக்கும் விளக்குகள் இவை. போட்டோவால்டிக் சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி இந்தச் சாதனத்தின் எல்.இ.டி. விளக்கை ஒளிரவைக்கும். சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிட்டால், இதன் சோலார் பேனல் சக்தியை உள்வாங்கிக்கொண்டு, மின் வெட்டு சமயங்களில் ஆபத்பாந்த வனாக ஒளி கொடுக்கும். முழுக்க சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு இது சுமார் ஆறு மணி நேரம் வரை ஒளி கொடுக்கும். விலை 500 முதல் 800 வரை!

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

டிப்ஸ்:மைக்ரோவேவ் அவனை உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை...


மைக்ரோவேவ் சமையல் நன்றாக இருக்கும்தான். ஆனால் அதை மட்டுமே எதிர்பார்த்து நேரத்தை வீணடிக்காமல் சமையலறையில் உள்ள மற்ற உபகரணங்களையும் பயன்படுத்தப் பழகிக் கொண்டால் வேலை சுலபமாகவும் துரிதமாகவும் நடைபெறும். அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள் இந்த முறையைக் கையாண்டு பார்க்கலாம்!

இரண்டு அல்லது 3 கப்புகளுக்கு மேல் தண்ணீரோ பாலோ சூடு பண்ண வேண்டுமானால், அதை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வைத்தே சூடேற்றிவிடுங்கள். அவனைப் பயன்படுத்தத் தேவையில்லை.

எண்ணெய் சூடேற்றிப் பொரித்தெடுக்கும் (Deep fryling) சமையல் வகைகளை மைக்ரோ அவனில் செய்யக்கூடாது.

பெரிய அளவுகளில் சமையல் செய்யும்போது மைக்ரோ வேவ் அவனில் சமைப்பதைத் தவிர்த்திடுங்கள்.

இனிப்பு வகைகளை மைக்ரோவேவ் அவனில் சூடு பண்ணலாம். ஆனால் இனிப்பு வகைகளில் சில்வர் பாயில் (Silver foil) இருந்தால் அதை மைக்ரோவேவில் சூடு பண்ணக்கூடாது.

உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை:

* மைக்ரோவேவ் ஓவன் சுலபமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லக்கூடியது. இதனை ஒரு மேசை மேலோ, பெஞ்ச் மேலோ வைத்துக் கொள்ளலாம். மின்சார அல்லது கேஸ் அடுப்புக்கு மிக அருகில் வைக்கக்கூடாது. ஏனெனில் இவற்றிலிருந்து வரும் வெப்பமும் நீராவியும் மைக்ரோவேவ் அவனின் இயக்கத்திற்குத் தடையாக அமையலாம்.

* அவனின் மேல் காற்றோட்டம் இருக்க வேண்டும். ஒரு அலமாரியினுள்ளோ, மிகவும் நெருக்கமான இடத்திலோ மைக்ரோவேவ் அவனை வைக்கக்கூடாது.

* மைக்ரோவேவ் அவனில் குறைந்த அளவில் சமையல் செய்யும் போது மின்சார உபயோகம் அதிக அளவில் மிச்சப்படுத்தப்படுகிறது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

* சமைக்கப்பட்ட உணவை ஒரு தட்டில் பரிமாறி சூடேற்றும்போது, ஒரு நிமிடமோ 2 நிமிடமோ சூடேற்றினாலே போதும்!

* சமைக்கப்பட்ட கறிவகைகள் சூடு பண்ணும்போதும் மூடியை உபயோகிக்க வேண்டும். ஆனால் இடையில் மூடியைத் திறந்து ஓரிரு தடவைகள் கிளறிவிட்டால் பரவலாக உணவு சூடேறும்.

* சில சமயங்களில் ப்ரீசரிலிருந்து எடுக்கப்படுகின்ற Frozen காய்கறி பாக்கெட்டுகள் பச்சைப் பட்டாணி, சோளம் பாக்கெட்டுகள் போன்றவை நேரடியாக மைக்ரோவேவில் டீபிராஸ்ட் பண்ணப்படும்போது, அந்தப் பாக்கெட்டுகளில் சிறு துளைகள் இடவேண்டும். இப்படிச் செய்யாது போனால் பாக்கெட் வெடித்துக் காய்கள் சிதற வாய்ப்புண்டு.

* சிறிய கழுத்து உள்ள பாட்டில்களில் உணவுப் பதார்த்தமோ பான வகைகளோ சூடேற்றக் கூடாது. ஓரளவு அகன்ற வாயுள்ள பாட்டில்களை உபயோகிக்கலாம். ஆனால் தொடர்ந்து அதிக நேரம் பாட்டில்களை சூடேற்றுவது அவ்வளவு நல்லதல்ல. அவை வெடிப்பதற்கு வாய்ப்புண்டு.

* சிறு குழந்தைகளுக்கான உணவு வகைகள் சூடேற்றும்போது அந்தப் பாட்டில் அல்லது பாக்கெட்டில் தரப்பட்டிருக்கின்ற சூடேற்றம் விளக்கங்களைச் சரிவரப் படித்த பின்னர் அதன்படி செய்ய வேண்டும். சூடேற்றிய உடனேயே அதைக் குழந்தைக்குக் கொடுத்துவிடாமல் அதன் வெப்பநிலை சரியாக இருக்கிறதா எனக் கைவிரல் வைத்துப் பார்த்த பின்னர் தான் கொடுக்க வேண்டும். அது போலவே குழந்தைகளின் பால் பாட்டில்களை பாலோடு சூடேற்றிக் கொடுக்கும் போதும் ஒரு சில துளிகள் நமது கையில் ஊற்றிப் பார்த்த பின்னரே கொடுக்க வேண்டும்.

* பெரியவர்களும் கூட மைக்ரோவேவ் அவனில் சமைத்த அல்லது சூடேற்றிய உணவுப் பொருள்களை இறக்கியவுடன் எடுத்து வாயில் போடக் கூடாது. முன்னர் கூறியது போல சமையல் முடிந்து மணி அடித்த பின்னரும் சில செகண்டுகளுக்கோ அல்லது ஓரிரு நிமிடங்களுக்கோ தொடர்ந்து கதிர்களின் தாக்கம் அதில் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் பயன்படுத்த வேண்டும்.

டிப்ஸ்:மின்சாரத்தை மிச்சப்படுத்த சில வழிமுறைகள்...

மின்தடை ஒரு பக்கம் படுத்துகிறது என்றால், பல குடும்பத் தலைவர்களை மின்சார பில்லும் பயமுறுத்துகிறது. அதிலும் வீட்டுக்கு ஓர் அளவாக இருக்கும் வாடகை வீட்டு பரிதாப மனிதர்களை. ஆனால் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் கொஞ்சமே கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். இ.பி. பில் "இனிய அதிர்ச்சி" தரும்.

மின்சாரத்தை மிச்சம் பிடிப்பது எப்படி? இதோ வழிமுறைகள்...

டிப்ஸ்:உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜும், ஏ.ஸி.யும் மின்சாரத்தை அதிகம் இழுக்கிறதா?

உங்களுக்கொரு விஷயம் தெரியுமா? நார்மல் ஃபிரிட்ஜின் ஆயுட் காலம் 15 லிருந்து 20 வருடங்கள்தான்! அதற்குப் பின் அதை இயக்க செலவிடும் தொகை ஃப்ரிட்ஜை வாங்கும்போது தந்த பணத்தை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். அதனால் சும்மா கிடைக்கிறதே என்றுகூட பழைய ஃப்ரிட்ஜை வாங்கி விடாதீர்கள். அதேபோல் அளவில் சிறிய ஃபிரிட்ஜிக்குத் தேவையான கரண்ட், அளவில் பெரிய ஃபிரிட்ஜிக்குத் தேவையான கரண்ட்டை விட குறைவுதான். எனவே உங்கள் குடும்பத்தின் தேவைக்கு ஏற்ற அளவில் ஃபிரிட்ஜை தேர்ந்தெடுத்தால் கரண்ட்டை மிச்சப்படுத்தலாம்.

டிப்ஸ்:வாஷிங்மெஷினை சரியாக கையாள்வது எப்படி?

"சரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை."
வாஷிங்மெஷின்.... உண்மையிலேயே நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால், அதை வாங்குவதற்கு முன்பாக எது, எதையெல்லாம் அலசி ஆராய வேண்டும்..? வாங்கிய பிறகு, எப்படியெல்லாம் பராமரிக்கவேண்டும்...? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டால்தான் அது வரப்பிரசாதமாக இருக்கும். இல்லையென்றால்... வம்புப் பிரசாதமாகி, "ஏண்டா வாங்கினோம்" என்று வாழ்க்கையே வெறுத்துவிடும்.

இந்த விஷயத்தில் நமக்கு உதவுவதற்காக வருகிறார் சுரமுத்து. இவர், சென்னையின் சில இடங்களில் இயங்கிவரும் "ஸ்ரீசர்வீஸஸ்" என்ற சர்வீஸ் சென்டரின் உரிமையாளர். வாஷிங்மெஷினை சரியாக கையாளத் தெரிந்தாலே போதும், அது...எந்தவித பிரச்சினையையும் கொடுக்காது. அதன்பிறகு, "இதைவிட ஈஸியான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை" என்று நீங்களே சொல்வீர்கள்!" என்று சிம்பிளாக அறிமுகம் கொடுத்தவர், டிப்ஸ்களை அடுக்கினார்.

எப்படித் தேர்ந்தெடுப்பது?

* புதிதாக வாஷிங்மெஷின் வாங்கும்போது அதில் எத்தனை வகை இருக்கிறது; அவற்றின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்; உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை; நிதி நிலைமை; வீட்டில் தண்ணீர் வரத்து; இடவசதி என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுங்கள்.

* வாஷிங்மெஷினில் அஜிடேட்டர், பல்சேட்டர், டம்பிள் என்று மூன்று வகைகள் உண்டு.

* அஜிடேட்டர் வகை மெஷினைத் திறந்தால் நடுவில் 'ராடு' போன்ற கருவி உயரமாக இருக்கும். இதுதான் துணிகளைத் திருப்பி, சுழற்றித் துவைக்கிறது. பல்சேட்டர் மெஷினில் இந்த வகை ராடு இல்லாமல், தட்டை வடிவ பிளாஸ்டிக்காலான தட்டு இருக்கும். இந்த இரண்டு வகை வாஷிங்மெஷின்களையும் டாப் லேடிங் (Top loading) வாஷிங்மெஷின் என்று அழைப்போம். இதில், மேல் பக்கக் கதவைத் திறந்து துணிகளை உள்ளே போட வேண்டாம். டம்பிள் வாஷிங்மெஷின் ஃப்ரன்ட் லோடிங் (Front loading) அதாவது, முன்பக்க கதவைத் திறந்து துணிகளைப் போடலாம்.

* அஜிடேட்டர் மற்றும் பல்சேட்டர் மெஷினில் செமிஆட்டோமேட்டிக் (Semi automatic) மற்றும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் (Fully automatic) என்று இரண்டு வகை உண்டு. டம்பிள்வாஷ் வகை மெஷின்கள் மட்டும் ஃபுல்லி ஆட்டோமேட்டிக்காகத்தான் கிடைக்கின்றன. சூடான தண்ணீ­ரில் அலசக் கூடிய வசதிகளும் இதில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.

என்ன விலை மெஷினே?

* செமி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 8,000 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்கள் 13,000 ரூபாயிலிருந்தும், டம்பிள் மெஷின்கள் 20,000 ரூபாயிலிருந்தும் கிடைக்கின்றன.

* மெஷின்கள் 4 கே.ஜி., 5 கே.ஜி. முதல் 8 கே.ஜி. வரையிலான கொள்ளளவில் கிடைக்கின்றன. 4 கே.ஜி. என்றால், 4 கிலோ கிராம் அளவுக்கான உலர்ந்த துணிகளைத் துவைக்க முடியும். நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால், 5 கே.ஜி. போதுமானது.

* மெஷினில் டியூப்பை, வீட்டிலிருக்கும் ஏதாவது ஒரு நல்ல தண்ணீர் குழாயுடன் இணைத்து விடுங்கள். செமி ஆட்டோமேட்டிக் என்றால், துணிகளைப் போட்டு, பவுடரையும் போட்டு, தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். பிறகு, 'சுவிட்ச் ஆன்' செய்ய வேண்டும்.

துவைத்த பிறகு, உரிய பட்டனைத் தட்டினால் அந்தத் தண்ணீர் வெளியேறிவிடும். பிறகு பட்டனை அழுத்தித் தண்ணீரை வெளியேற்றி, பைப்பை மீண்டும் திறந்து விட வேண்டும். இப்போது அலசுவதற்கான பட்டனைத் தட்டினால், அது அலசிக் கொடுக்கும். மீண்டும் ஒரு பட்டனைத் தட்டினால், அந்தத் தண்ணீரும் வெளியேறிவிடும். பிறகு, துணிகளை டிரையரில் போடவேண்டும். அதன் மீது, ஸ்பின்கேப் போட்டுவிட்டு, டிரையரின் கதவை மூட வேண்டும்.

ஃபுல்லி ஆட்டோமேட்டிக் என்றால்... துணிகளையும், தேவையான பவுடரையும் போட்டு விட்டு, தண்ணீர் அளவை கொடுத்திருக்கும் பட்டன் மூலம் செலக்ட் செய்துவிட்டால் போதும். அதுவே துவைத்து, அலசி, டிரையரில் பிழிந்து கொடுத்துவிடும்.

* மெஷினில் துணிகளைப் போடும்போது, துணிகளைவிட இரண்டு இன்ச் அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் துணிகளை நன்கு துவைக்கும்.

* உங்கள் வீட்டுக்குழாயில் உப்பு தண்ணீர்தான் என்றாலோ... குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்­ணீர் வரும் என்றாலோ... செமி ஆட்டோமெடிக் மெஷினை வாங்கலாம். சில சமயம் பைப்பில் தண்ணீர் வரவில்லையென்றாலும்கூட, நேரடியாக தண்ணீர் ஊற்றும் வசதி இந்த வகை மெஷின்களில் உண்டு. தண்ணீர் வரத்து பைப்பில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்றால் மட்டுமே ஃபுல்லி ஆட்டோமெடிக் வாஷிங்மெஷினை வாங்குங்கள்.

* பொதுவாக எந்தவகை வாஷிங் மெஷினாக இருந்தாலும், அதில் இருக்கும் டிரையர், எண்பது சதவிகிதம்தான் துணியை உலர்த்தும், அதன்பிறகு கொடியில் சற்று நேரமாவது உலர்த்த வேண்டும்.

* என்னதான் மெஷினில் துவைத்தாலும், துணிகளில் சட்டை காலர், பேன்ட்டின் அடிப்பகுதிகளை நீங்கள் கைகளால் ஒரு முறை நன்றாக கசக்க வேண்டும்.

* பெட்ஷீட், ஜீன்ஸ், உல்லன், பாலியஸ்டர், காட்டன் என்று துணிகளின் தன்மைக்கு ஏற்ப பார்த்துத் துவைக்கும் வசதிகள் கொண்ட மெஷின்களும் வந்துவிட்டன. இவற்றைத் தேர்ந்தெடுத்தால், உங்களின் துணிகள் சேதமடையாமல் இருக்கும்.

* வாஷிங்மெஷின்கள் அதிகமாக மின்சாரத்தை இழுக்காது. தினமும் இரண்டரை மணி நேரம் ஓடினால் ஒரு யூனிட்தான் ஆகும். அதுவும் துவைக்கும்போது மோட்டார் ஓடுவது என்பது அரைமணி நேரம்தான்.

பயன்படுத்துவது எப்படி?

* பொதுவாக எல்லா மெஷின்களிலும் லின்ட்பில்டர் (lint filter) வசதி உருவாக்கப்பட்டிருக்கும். இது, துணிகளைத் துவைக்கும்போது ஷர்ட், பேன்ட், சேலையில் இருந்து வெளியேறும் நூல்களை எல்லாம் சேகரித்து, வடிகட்டி வைத்திருக்கும். இந்த ஃபில்டர், பார்க்கச் சின்னக் குழந்தைகளின் கால் சாக்ஸ் போலத் தெரியும். ஒவ்வொரு முறை துவைத்ததும் இந்த ஃபில்டரை சுத்தம் செய்ய வேண்டும். ஃபில்டர் துணி கிழிந்துவிட்டால், குழந்தைகளின் சாக்ஸை எடுத்து அதில் மாட்டி விட்டுவிடுவார்கள். அப்படிச் செய்யாமல் உரிய சர்வீஸ் ஆட்களை அழைப்பதுதான் நல்லது.

* மெஷினுக்கு வெளியே இன்லெட் வால் ஃபில்டர் என்றொரு வடிகட்டி அமைக்கப்பட்டிருக்கும். இது தண்ரில் இருந்துவரும் அழுக்குகளை எல்லாம் வடிகட்டி, சுத்தமான தண்ணீரை மெஷினுக்குள் அனுப்புகிறது. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை இந்த ஃபில்டரையும் சுத்தம் செய்து விடுங்கள்.

* சுவிட்ச் போர்டில் இருந்து நேரடியாகத்தான் மெஷினுக்குக் கனெக்ஷன் கொடுக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் எக்ஸ்டன்ஷன் பாக்ஸ் பயன்படுத்தாதீர்கள். இதனால், சரியாக எர்த் கிடைக்காமல் போகும். தேவையான எர்த் சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரிஷியன் மூலம் பரிசோதித்து விடுங்கள். அது, சரியாக இல்லையென்றால் ஷாக் அடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

* வெள்ளைத் துணிகளையும், கலர் துணிகளையும் ஒன்றாகத் துவைக்காதீர்கள். இதனால், வெள்ளைத் துணிகள் நாளடைவில் தன்னுடைய தரத்தை இழந்துவிடும்.

* சொட்டு நீலம் (லிக்விட் ப்ளூ) வாங்கும்போது அது டை பேஸ்டு (Dye based) நீலமா என்று பார்த்து வாங்குங்கள். பவுடர் பேஸ்டு (power based) பயன்படுத்தும்போது, சரியாகக் கரையாமல் துணிகளில் ப்ளூ கலர் கறை படிந்து விடக்கூடும்.

* உங்கள் வீட்டில் பைப் கோளாறு ஏற்பட்டால், ஃபுல்லி ஆட்டோமெட்டிக் மெஷினாக இருந்தாலும் செமி ஆட்டோமெடிக் போல பயன்படுத்த முடியும். என்றாலும், அது ஒரு ஆப்ஷன்தான். இதையே தொடர்ந்து பயன்படுத்தத் தேவையில்லை.

இந்த மெஷினில் தண்ணீரை வெளியே இருந்து எடுத்து ஊற்றித் துவைக்கும்போது மேல்புறத்தில் இருக்கும் சுவிட்ச்களின் மேல் தண்ணீர் படக்கூடாது. ஏனென்றால் அந்த இடத்தில்தான் எலெக்ட்ரானிக் அயிட்டங்கள் இருக்கும். அதில் தண்ணீர் படும்போது, சரியாக வேலை செய்யாமல், செயலிழந்து, செலவு வைத்து விடும். எனவே, அந்த இடத்தில் டவல் அல்லது கடினமான துணியைப் போட்டு மூடிவிட்டு உபயோகியுங்கள்.

* வாஷிங்மெஷினை பாத்ரூமில் வைக்காதீர்கள். வெகு சீக்கிரத்தில துருப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது. அதிகம் வெயில் படக்கூடிய இடங்களிலும் வைக்காதீர்கள்.

* வாஷிங்மெஷின் வாங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டால் உடனடியாக சர்வீஸ் செய்து விடுங்கள்.

* துணிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப, தானே தண்ணீரை செலக்ட் செய்து கொள்ளும் டெக்னிக்குக்கு 'ஃபஸ்ஸி லாஜிக்' (Fuzzy logic) என்று பெயர். மெஷினின் உள்ளே வரும் தண்ணீரின் அடர்த்தி, இரண்டையும் பரிசோதித்து, துணிகள் முழுவதும் துவைக்கப்பட்டு விட்டதா என்று கண்டறியும் டெக்னாலஜிக்கு 'நியூரோ ஃபஸ்ஸி' (Neuro fuzzy) என்று பெயர். இந்த வசதிகள் எல்லாம் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் மெஷின்களில் கிடைக்கும்.

* சாஃப்டான துணிகளை அலசும்போது அதற்கென பிரத்யோகமாக விற்கப்படும் சாஃப்ட்னர்களை வாங்கி உபயோகப்படுத்துங்கள். ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின்களில் இதற்கென தனியாக ஒரு பாக்ஸ் கொடுத்திருப்பார்கள். அதில், ஊற்றி வைத்துவிட்டு பட்டனை ஆன் செய்தால், தானாக எடுத்து உபயோகிக்க ஆரம்பித்துவிடும்.

துவைச்சு, தூள் கிளப்புங்க!

டிப்ஸ்:சுத்தம் எப்பவும் நல்லது!

ஒல்லிக்குத்தான் மவுசு!

மின்சாரம் வந்த புதுசில் பயன்படுத்தப்பட்ட குண்டு பல்புகளையே இப்போதும் பயன் படுத்தி வருகிறோம். கேட்டால் குண்டு பல்புக்கு குறைந்த மின்சாரம் போதும் என்கிறோம். குண்டு பல்புக்கு பதிலா குறுகிய குழல் விளக்குகளை பயன்படுத்தலாம். குண்டு பல்பைவிட இந்த விளக்குகளில் 40 சதவீதம் மின்சாரம் மிச்சம்! குண்டு பல்பைவிட விலை கூடுதலாக இருந்தாலும் அதற்கேற்ப நீண்ட நாளைக்கு தாக்கு பிடிக்கும்.

ஏசியை எப்படிப் பராமரிப்பது?

ஏசியை எப்படிப் பராமரிப்பது? ஏர் கூலர் எப்படி? என்ன பிராண்ட்? என்ன விலை? (AC & Air Cooler)

ஏசியை சரியாகப் பராமரிக்காவிட்டால் நீண்ட நாள் உழைக்காது. அதோடு, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு ருக்கிறது. முறையாகப் பராமரிக்காத ஏசி அதிகம் செலவு வைக்கும். எப்படிப் பராமரிப்பது என்பதை விளக்குகிறார் ஏசி மெக்கானிக் இஜாஸ் அகமது. மாதம் ஒருமுறையாவது ஏசியை சர்வீஸ் செய்யவேண்டும். அதிகமான புகை, புழுதி உள்ள இடங்களில் வசிப்பவர்கள் குறைந்தது மாதத்துக்கு 2 முறை சர்வீஸ் செய்யவேண்டும். அதிக தூசி ஏசியில் சேர்ந்தால் பாதிப்பு நமக்குத்தான். எனவே, ஏசியில் உள்ள ஃபில்டரை சுத்தப்படுத்த சர்வீஸ் செய்வது அவசியம். அதிகம் பயன்படுத்தாத காலகட்டத்தில்கூட சர்வீஸ் செய்து வைப்பது ஏசியின் வாழ்நாளைக் கூட்டும்.

சனி, 22 டிசம்பர், 2012

மின்சாரம் – ஒரு கண்ணோட்டம்!


நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.. என்னைப் பொருத்தவரை கடந்த இருபது ஆண்டுகள் ஆட்சியில் மாறி மாறி இருந்த இரண்டு அரசுகளும் இதற்குப் பொறுப்பாகும். இந்தியாவின் மற்றும் தமிழ்நாட்டின் மக்கள் தொகை பெருகும் விகிதம் தெரியும், நாட்டின் முன்னேற்ற விகிதம் எவ்வளவு இருக்கும் என்று ஊகித்து இருப்பார்கள். வருடத்திற்கு எவ்வளவு மின் தேவை அதிகரிக்கும் என்று தெரிந்திருக்கும். பராமரிக்காவிட்டால் எவ்வளவு இழப்பு என்றும் தெரிந்திருக்கும்.. இவ்வளவு தெரிந்திருந்தும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டாதது ஏன்..?? தொலைநோக்குத் திட்டத்தில் பணத்தை முடக்கினாலும், இந்த சனங்களுக்கு அது புரியாது. குறுகிய கால இடைவெளியில் கிடைக்கும் நன்மைகளையே நாம் விரும்புகிறோம், அதையும் இந்த அரசியல் வாதிகள் நன்கு அறிந்து வைத்து உள்ளனர். தேர்தல் அன்பளிப்புகள், இலவசங்கள், தேர்தலுக்கு முன்னால் போடப்படும் சாலைகள், இவை எல்லாம் நான் சொன்ன கருத்தையே ஆணித்தரமாய் பிரதிபலிக்கின்றன.

மற்றுமொரு முக்கிய விஷயம். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டுக்குப் போதுமானதே. ஆனால் எப்படி இந்தப் பற்றாக்குறை..??

1. ஓரிடத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், வெகு தூரத்தில் இருக்கும் மற்றொரு இடத்திற்குக் கம்பிகள் மூலம் கடத்தப் படுகின்றன. இதனால் ஏற்படும் மின் இழப்பு மட்டும் முப்பது சதவிகிதத்திற்கும் மேல் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் ஓட்டைப் பானையில் மோர் சுமந்து செல்வதைப் போலத்தான். இது போக மின்னழுத்த மாற்றிகளில் (Step down and step up transformer stations)ஏற்படும் மின்னிழப்புகள், மற்றும் சரி வர பராமரிக்கப் படாத மின்னாலைகளில் ஏற்படும் இழப்புகள் மற்றும் இதர கசமுசா இழப்புகளையும் கருத்தில் கொண்டால், நாம் (உண்மையாக)தயாரிக்கும் மின்சாரத்தில் பாதி கூட பயனாளர்களைச் சென்றடைவதில்லை.

2. இந்தியாவில் மின் திருட்டு என்பது பல இடங்களில் அரசாங்கத்தின் துணையோடும், மற்றும் பல இடங்களில் கண்டு கொள்ளப் படாமலும் அரசியல்வாதிகளின் தலையீட்டோடும் அமோகமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட, பல அரசியல் வாதிகள் மற்றும் பெரும்புள்ளிகளின் ஆலைகள் திருட்டு மின்சாரத்திலேயே ஓடுகின்றனவாம்.

3. இந்தியாவில் மட்டும் மாதத்திற்கு மூவாயிரம் தொலைத்தொடர்புக் கோபுரங்கள் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசு தொலைதொடர்பு நிறுவனங்களால் நிறுவப் படுகின்றன. நாட்டில் டெலிகம்யூனிகேஷன் எனப்படும் தொலைதொடர்புப் பயனாளர்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், அவர்கள் அனைவருக்கும் சேவை அளிக்க வேண்டியது கட்டாயமாகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், இதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதும் இதற்குக் காரணம். ஒவ்வொரு தொலைத்தொடர்பு கோபுரத்திற்கும் மூன்றிலிருந்து நான்கு கிலோவாட் மின் இணைப்பு தேவைப்படுகிறது. கொஞ்சம் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். வெறும் மின் கோபுரத்திற்கு மட்டும் இவ்வளவு மின் தேவை என்றால், தமிழகத்தில் நாள் தோறும் எத்தனை பள்ளிகள், கல்லூரிகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், தனி வீடுகள் கட்டப் படுகின்றன.. அனைத்திற்கும் மின் இணைப்புத் தர வேண்டுமே கொஞ்சம் யோசியுங்கள்.. தலை சுற்றுகிறதா…???

4. நம்மிடம் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு அந்த அளவுக்கு இல்லை.

5. மின்சாரம் என்றால் அது வெகு தொலைவில் இருந்து தயாரிக்கப்பட்டு எங்கிருந்தோ நமக்கு வந்து விடுகிறது. இதில் நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் உள்ளது.

சரி.. மேற்கூறிய புகார்களுக்கு இனி நாம் என்னென்ன செய்யலாம்..

நாம் எப்போதும் கூறுவது போல, மாற்றங்கள் நம்முள் இருந்து தொடங்க வேண்டும்.
வீட்டில் இருக்கும்போதும், அலுவலகத்தில் பணிபுரியும்போதும் தேவையில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சாதனங்களை நிறுத்தும் பழக்கத்தை நமக்குள் ஏற்படுத்த வேண்டும். என் உடன் பணி புரியும் நண்பன், அலுவலக வளாகத்தில் என்னுடன் பேசிக்கொண்டே நடந்து வருவான்.. சட்டென்று உபயோகப்படாத அறைகளை எட்டிப் பார்த்து மின்விளக்குகளை அணைத்து விடுவான். வளாகத்திலும், தேவைக்கு அதிகமாக இயங்கும் மின் விளக்குகளை அணைத்துக் கொண்டே நடப்பான். நிறுவனம் தானே பணம் கட்டுகிறது நமக்கென்ன என்று அவன் போகவில்லை. மின்சாரம் நமது சொத்து. பல்லாயிரக்கான ரூபாய்கள் பணம், பலரது உழைப்பினால் அது உங்கள் கைக்கு வருகிறது என்ற எண்ணம் நமக்குள் வளர வேண்டும், அடுத்த சந்ததிகளுக்கும், இதன் தேவையைச் சொல்லிப் புரிய வைத்து வளர்த்த வேண்டும்.

கேப்டிவ் பவர் பிளாண்ட் என்று ஒன்றைச் சொல்வார்கள். அதாவது ஓரிடத்தில் தயாரிக்கப் படும் மின்சாரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உபயோகப்படும் விதத்தில் மின் நிலையங்களை வடிவமைத்தல். அதாவது பெரிதாக ஒன்றை ஓரிடத்தில் கட்டி, மின்சாரத்தைக் கம்பிகள் மூலம் கடத்துவதற்குப் பதிலாக, சிறு சிறு மின் உற்பத்தி நிலையங்களை ஆங்காங்கே தேவைக்கேற்ப அமைத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுதல். இதன் மூலம் ட்ரான்ஸ்மிஷன் லோசெஸ் என்றழைக்கப்படும் நீண்டதூர கம்பிக்கடத்திகளினால் ஏற்படும் இழப்பைக் கணிசமாகக் குறைக்கலாம்.

மின் திருட்டை ஒழிக்க அரசு தான் ஏதேனும் செய்ய வேண்டும்.

தொலைதொடர்பு கோபுரங்கள் அனைத்தும் டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப் பட்டு உள்ளன. மின் இணைப்பு இல்லாத நேரத்திலும் அது இயங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வடிவமைப்பு உருவாக்கப் பட்டது. மின் இணைப்பே இல்லாத பல ஊர்களிலும், தொலைத்தொடர்பு கோபுரங்கள் முழு நேர டீசல் ஜெனரேட்டர்களால் மின் உற்பத்தி செய்து இயக்கப் படுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால் பலகோடிகளில் புழங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த டீசலுக்கு அரசிடம் இருந்து மானியம் பெறுவது தான். இவர்களுக்கு எதற்கு மானியம்..?? (ஏண்டா நாட்டுல எவ்வளவு பிரச்சினை இருக்கு.. இவங்க என்ன பொழைக்க வழியில்லாம நடுத்தெருவுல நிக்கிறாங்களா…??? ) இன்னும் கொடுமை என்னவென்றால் இவ்வாறு மானியத்துடன் வழங்கப்படும் டீசலை முறைகேடாக (தெரிந்த விஷயம் தானே..) பலர் உபயோகிக்கிறார்கள்.. பகல் கொள்ளை போல.. எப்படி ரேஷனில் ஊற்றப் படும் மானிய மண்ணெண்ணெய் வெளியில் விற்கப் படுகிறதோ, அதே போலத்தான். இது சின்ன விஷயம் இல்ல.. இந்த முறைகேடுகளால் பலகோடிகள்(கிட்டத்தட்ட முப்பது கோடிக்கும் மேல்) வருடத்திற்கு இழப்பு ஏற்படுகிறதாம்.. நம்ப முடிகிறதா..?? தொலைத்தொடர்பு கொபுரங்களுக்குத் தேவையான மின்சாரத்தில் பாதியை ஹைப்ரிட் (சோலார் மற்றும் காற்றாலை) முறையில் தானே தயாரித்துக் கொள்ள வேண்டும் , என்பது போன்ற சட்டங்கள் இயற்றப் பட்டும் சரிவர நடைமுறையில் இல்லை.இவை சரிவர நடைமுறைப் படுத்தப் பட வேண்டும்.

மின்சாரம் என்பது வெறும் நிலக்கரியிலும், நீரிலும், கதிரியக்க முறையிலும் மட்டும் பெறக்கூடிய விஷயமல்ல. நாம் தினந்தோறும் வெளியேற்றும் வீட்டுக் கழிவுகளில் இருந்து கொஓது மின்சாரம் தயாரிக்க முடியும். ஆதிஷா வினோ அவர்கள் சமீபத்தில் கழிவுகள் பற்றிய ஒரு அருமையான கட்டுரை எழுதி இருந்தார். இது போன்ற கழிவுகளைச் சரியான முறையில் உபயோகித்தால் அதன் மூலம், நமக்குத் தேவையான அளவு மின்சாரத்தை நாமே தயாரிக்க முடியும். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், கழிவுகள் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரித்து, அதன் மூலம் பல கிராமங்களின் மின் தேவையை தன்னிறைவு அடையச் செய்து காட்டி இருக்கிறார்கள். பல்வேறு கிராமங்களில் இவை செயல்படுத்தப் படுகின்றன. கிராமங்களை விட அதிகமான பொருளை உபயோகிப்பவர்கள் நகர மக்கள்.. நம்மால் செய்ய முடியாதா….???

அளவுக்கு அதிகமாக உபயோகித்தல், ஆடம்பரத்திற்காக உபயோகித்தல், வீணாக்குதல் போன்றவற்றைக் குறைக்க விழிப்புணர்வு தேவை.

இப்போதைய தேவைக்கு புதிதாக மின்னாலைகள் தேவை இல்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மக்களுக்குப் பாதுகாப்பு தரும் மின்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நல்ல குடிமக்களாகத் திகழ வேண்டும்.

நன்றி.. சாமக்கோடங்கி

வியாழன், 20 டிசம்பர், 2012

வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?


ஆமாம் இந்த வாட் ஓம் ஆம்பியர் வோல்ட் இதெல்லாம் என்ன? இதை பத்தி தெரிஞ்சுக்கனும்னா கூகிலாண்டவர்கிட்ட கேட்டாப் போதும் பக்கம் பக்கமா லிஸ்ட் தருவார். ஆனா எதுலயும் நேரடியான விளக்கம் இருக்காது, சுத்தி வளச்சுத்தான் சொல்லி இருப்பாங்க எல்லாரும். நானும் அப்படித்தான் சொல்லப் போறேன். இது உங்களுக்கு பயனுள்ள பதிலா இருக்கானு நீங்கதான் சொல்லனும். :(

இதோ ஒரு சிம்பிளான பதில்:

மின் கடதிகள் எப்பொழுதும் நகர்ந்து கொண்டிருக்கும் மின்மூலக்கூறுகளால்(movable charges) ஆனது. மின்னொட்டம்(current) என்பது இந்த மின் மூலகூறுகள் ஓடுவதால் ஏற்படுவது. மின்னழுத்தம்(வோல்ட்)       இந்த      ஒத்த      மின்       மூலக்கூறுகளை  ஒரிடதிலிருந்து இன்னொரு இடதிற்க்கு தள்ளும் வேலையைச் செய்கிறது. ஒவ்வொரு மின்கடதியும்(conductor) ஒரு குறிப்பிட்ட்ட அளவு தடையை இந்த மின்மூலக்கூறுகளின் ஓட்டதிற்க்கு அளிக்கிறது. இந்த தடையை(Resistance) மீறி மின்னூட்டங்கள்(charges) நகர்வதால் கடத்தியில் வெப்பம் உண்டாகிறது. எவ்வளவு மின்மூலக்கூறுகள் ஒரு நொடியில் நகர்கின்றன எனப்தை ஆம்பியர்(Amepre என்ற அலகால் அளக்கிறோம். அந்த நேரத்தில் பரிமாறப்படும் மின்சக்தியானது வாட்(Watt) என்றும், மின்தடை ஓம் (ohm) என்றும் அளக்கபடுகிறது. ஆம்ப்பியர், வோல்ட், வாட், ஓம் ம் சிம்ப்பிள்த்னே. இன்னும் கொஞ்சம் விளக்கமா பார்க்கலாமா?

முதலில் வாட் மற்றும் ஆம்பியர்.
மின்சாரம் பற்றித் தெரிந்து கொள்வதற்க்கு முதல் இதனை தண்ணீருடன் ஒப்பிடலாம். மேல்நிலைத்தொட்டியில் சேகரிக்கப் பட்டிருக்கும் தண்ணீர் எப்படி குழாய்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப் படுகிறது எனப் புரிந்து கொண்டால்( எந்த ஊருல குழாய்ல தண்ணி வருது வெறும் காத்துதான் வருதுனு சொன்னீங்கனா அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது) , அதை போலவே மின் வினியோகம் எப்படி நடக்கிறது என எளிதாக விளக்கம் கொடுக்கலாம்.

முதலில் வாட் மற்றும் ஆம்பியர் பற்றி பார்ப்போம். இரண்டும் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தும் ஏனேன்றால் இரண்டும் ஒரு பொருளின் ஓட்ட வீதத்தை(Flow rate) குறிப்பவை, ஆனால் இவை குழப்பத்தை விளைவிக்க காரணம் எந்த பொருள் கம்பிகளின் வழியே ஓடுகிறது என்று சரியாக விளங்கிக் கொள்ளாமல்( உண்மையில் பாட புத்தகங்கள் இதை சரியானமுறையில் விளக்குவதில்லை) அதன் ஓட்டவீதத்தை பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்பதே ஆகும். தண்ணீர் என்றால் என்னவென்றே தெரியாமல் தண்ணீரின் ஓட்டத்தை பற்றி படித்தால் விளங்குமா??!

மின்சாரம் (current) என்பது ஒரு பொருள் அல்ல, ஒரு பொருளின் ஓட்டத்தை மின்சாரம் என்கிறோம். மின்சாரம் பாய்கிறது என்று சொல்லும் போது எந்த பொருள் கடத்தியில் ஓடுகிறது?. அதன் பெயர் “மின்னூட்டம்”(Charge).

ஆம்ப்பியர்:
கடத்தியின் வழியே எது பாய்கிறது?. அதற்க்குப் பல பெயர்கள் உண்டு.
· மின் மூலக்கூறுகள்
· எலக்ட்ரான்கள்
· மின்னூட்டம்
· எலக்ட்ரான் திரவம்
மின்னூட்டங்கள் “கூலும்”(Coulomb) என்ற அலகால்(unit) அளக்கப் படுகிறது. ஆம்ப்பியர் என்றால் “ ஒரு கூலும் மின்னூட்டங்கள் ஒரு வினாடியில் பாய்கிறது” என்று பொருள். மின்னோட்ட்த்தை நீரோட்டதுடன் ஒப்பிட்டால் ஒரு லிட்டர் தண்ணீர் என்று சொல்வோமே அது போல ஒரு கூலும் மின்னூட்டம் எனச் சொல்லலாம். ஒரு வினாடி நேரத்தில் குழாய்வழியே ஒரு லிட்டர் தண்ணீர் ஓடுகிறது என்றால் அதன் ஓட்ட வீதத்தை (flow rate) ஒருலிட்டர்/வினாடி என அளக்கலாம்,இதை பொதுவாக gpm(gallons per minute) எனக் குறிப்பிடுகின்றனர். இதோ போல் ஒரு கடத்தியில் (conductor or wire) ஒரு வினாடி நேரத்தில் ஒரு கூலும் மின்னூட்டங்கள் பாய்ந்து சென்றால் அதில் ஒரு “ஆம்பியர்” மின்சாரம் செல்கிறது எனக் குறிப்பிடலாம்.

வாட்:
“வாட்”(Watt)- இதுவும் மின்னியல் பொறுத்தவரை குழப்பமான ஒன்று, சரியாகப் புரிந்து கொண்டால் போதும். 40 வாட்ஸ் பல்பு, 60 வாட்ஸ் பல்புனு சொல்லுவாங்க, 1/2 ஹெச்பி(hp) மோட்டார்னு சொல்லுவாங்க. இதேல்லாம் மின்னாற்றலினை(electrical energy)க் குறிக்கும் அளவுகளே. மின்னுட்டங்கள் பாய்வதை மின்சாரம் என்கிறோம், இதன் அலகு ஆம்பியர் எனப் பார்த்தோம். இப்படி ஒன்றைச் சொல்லியதையே மறந்து விட்டு நமது பாடப்புத்தங்கள் மின்னூட்டங்கள் கடத்தியின் வழியே பாய்வதால் மின்னாற்றல் பாய்கிறது, இது வாட் என அளக்கப்படுகிறது என்று விளக்கம் கொடுப்பார்கள். 2 மார்க் வாங்கினாப் போதும்னு நினைக்கிற நம்மாளும் இதை மனப்பாடம் பண்ணி எழுதிட்டு போய்ட்டே இருப்பான். இத புரிஞ்சிக்கனும்னு முயற்சி பன்றவன் பைத்தியம் ஆகிடுவான். ஏன்னா கொஞ்ச நேரம் முன்னாடி மின்னூட்டம் ஓடினா அதுக்கு மின்சாரம்னு பேருனு படிச்சிட்டு, திரும்ப அப்படி ஓடினா அதுக்கு இன்னொரு பேரு, இன்னொரு அலகுனு சொன்னா எது சரி? எது தப்புனு குழப்பம்தான் மிஞ்சும்.

வாட் என்பது மின்னாற்றல் பாய்வு வீதத்(flow rate)தை குறிக்கிறது. ஆனால் இங்கே பாய்வது என்ன? ஆற்றல். “வாட்” என்பது ஒரு வினாடி நேரத்தில் பாயும் மின்னாற்றலைக் குறிக்கும் ஒரு ஆடம்பரமான வார்த்தை(fancy word). அப்படியெனில் மின்னாற்றலின் அளவு என்ன?. எந்த வகையான ஆற்றலும் ஜூல்(Joule) எனற அலகால் அளக்கப் படுகிறது. ஒரு ஜூல் மின்னாற்றலை ஒரிடதிலிருந்து இன்னோரு இடத்திற்ற்கு மின்கடத்தியின் வழியாக பாயச் செய்யலாம். நீங்கள் ஒரு ஜூல் மின்னாறலை ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு மின்கடத்திக்யின் வழியே எடுத்துச் சென்றால், இந்த ஆற்றல் பாய்வு வீதம் 1ஜூல்/வினாடி, “ ஒரு ஜூல் /வினாடி என்பது ஒரு வாட்”

மின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா?

இதுக்கு பதில் சொல்லனும்னா, உங்க வீடல இருக்கிற குண்டு மின்விளக்கை எடுத்துக்குவோம்(Bulb). அந்த மின்விளக்கை இனைக்கும் கடத்தியில்(Wire) மின்னூட்டங்கள்(Electrons) உக்காந்துட்டு முன்னோக்கியும் பின்னாடியும் அலஞ்சிட்டு இருக்கும். படத்தைப் பார்க்கவும். அதுதான் AC அல்டர்நேட்டிங் கரண்ட்(இதுக்கு சரியான தமிழ் வார்த்தை இருந்தால் செல்லவும்) . அதே நேரத்தில் மின்கந்தப் புலத்தால்(Elecromagnetic field) உருவான மின்காந்த அலைகள்(Electro magnetic waves) வேகமாக கட்த்தியில் முன்னேரிச் செல்லும். இந்த அலையில் உள்ள சக்தியானது(Energy) முன்னும் பின்னும் அலையாது, ஆனால் அது கடத்தி வழியாக ஓடி மினியற்றியில் இருந்து விளக்கிற்கு பாயும்.

சரி, இப்ப இந்த கேள்விய நீங்களே கேட்டுப் பாருங்க: மின்னோட்டம் (current) தான் மின்சாரமா(electricicty)?,

அப்படியெனில் நாம் மின்சாரம் கடத்தியின் உள்ளெ உக்காந்து கொண்டு முன்னும் பின்னும் ஓடிகொண்டிருகிறது.

அடுத்து இந்த கோணத்தில் பாருங்கள் அதை ஒரு ஆற்றலின் வடிவாக? . மின்சார்ம் என்பதை மின்னாற்றலாக எடுத்துக் கொண்டால் அது முன்னும் பின்னும் அலைய முடியாது கடத்தியினுள்ளே, அதற்க்கு பதிலாக அது மின்காந்த புலத்தை தோற்றுவித்து முன்னோக்கி ஓடுகிறது.

ஆனால் மேலே சொன்ன இரண்டையும் ஒரெ நேரத்தில் செய்கிறதா? அப்படியெனில் எது மின்சாரம்?

* முன்னும் பின்னும் அலையும் எலக்ட்ரான்களா?

இல்லை

*மிக வேகமா மின்காந்தபுல ஆற்றலா?

- புததகங்களில் தேடினால் முரனாண விளக்கங்கள்தான் உள்ளன.

யாராவது ஜெனரேட்டர் தான் மின்சாரதை உருவாக்குகிறதா என்றால்? மின்னியல் பற்றி நாம் தவறான கோனத்தில் இருக்கிரோம் என்று அர்த்தம்.


இதை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் மின்னியல் என்பது மிகஎளிதானதே.பொதுவாக மின்சாரம் என்பதை பலரும் எப்படிச் சொல்கின்றனர் என்பதைப் பார்ப்போம்....? அதுல எது சரினு நினக்கிறீர்களே அதை ஆழ்ந்து சிந்தியுங்கள். அதுல் ஒன்னுதான் சரி மற்ற எல்லாம் தவறு.விஞ்ஞானிகள், தினசரி வாழ்க்கையில், பள்ளி அறிவியல் புத்தகத்தில் எல்லாம் இந்த மின்சாரத்திற்கு கொடுக்கும் வரையறைகள் என்னனு பாக்கலாமா?

ப்யூஸ்

மின்சாரம் இன்னைக்கு ஒரு முக்கியமான ஒன்றாகிவிட்டது வாழிக்கையில, அது இல்லாம அன்றாட வாழ்க்கைய ஓட்றது கொஞ்சம் கஸ்டம் தான். ஆனா என்ன ஒரு சின்னதா ப்யூஸ் போனாக் கூட , அத மாத்த யோசிக்கிற மக்கள் நிறையப் பேரு இருக்காங்க, காரணம் அதை பற்றிய பயம், சரியான புரிதல் இல்லாமைனு சொல்லலாம். பயப்படும் படியானா, இல்ல தொட்ட உடனே ஆளைக் காலி [பண்ணிடும் பயங்கரமான ஒன்னு இல்ல அது,