ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

காஸ் அடுப்பு டிப்ஸ்

நைலக்ஸ் புடவைக் கட்டிக்கொண்டு சமைக்க கூடாது.மேலும் குழந்தைகள் அடுப்பிற்கு அருகில் சென்று காஸ் குழாய்களை  திருப்பாமல்    பார்த்துக் கொள்ள வேண்டும். 

சுய ரிப்பேர் வேலை ஆபத்தானது.விற்பனையாளரிடமே இதை விட்டு விட வேண்டும். மேலும் ரப்பர் குழலில் வெடிப்பு, துளை  இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



அடுப்பு எப்போதும் தரை மட்டத்தில் இருந்து இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும். 

பிளாஸ்டிக் சாமான்களை அடுப்பின் அருகில் வைக்ககூடாது.  

இரவில் படுக்கப் போகும் முன்பு ரெகுலேட்டரும், அடுப்பின் வால்வும் சரியாக மூடி இருக்கிறதா எனக் கவனிக்கவும். 

அடுப்பில் காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகியவற்றை வேக வைக்கத் தேவையான அளவு தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.  

பாத்திர அலமாரிகளோ, மற்றவைகளோ எரியும் அடுப்பிற்கு மேல் இருக்கக் கூடாது. ஏனெனில் அவற்றை எடுக்க முற்படும் போது புடவையில் தீப் பிடிக்க வாய்ப்பு உண்டு. 

அடி கனமான, அகலமான, வாய் அகன்ற, உயரம் குறைந்த பாத்திரங்களில் கூட்டு, குழம்பு வைப்பதால் எரிசக்தியை கணிசமாகச் சேமிக்க முடியும்.  

ஆடையில் நெருப்பு பற்றி விட்டால் உடனே ஒரு ஜமுக்காலம் அல்லது கம்பளியை உடலைச் சுற்றி போர்த்துவதால் நெருப்பை அணைக்க முடியும். 

அடுப்பின் மீது நீரைக் கொட்டி கழுவக்கூடாது. இதனால் பர்னர்கள், பட்டன்கள் இவற்றில் துருவும், அடைப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.  

சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி அதைக் கொண்டு காஸ் அடுப்பைத் துடைத்தால் பளிசென்று தோன்றும்.  

குரோமிய காஸ் அடுப்பு, ஸ்டவ் போன்றவற்றை சூடாக இருக்கும் போது துடைத்தால் பளிச்சென்று இருக்கும். 

அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்ந்த வெதுவெதுப்பான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து சுத்தப்படுத்திய பின் உபயோகிக்கவும்.

காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெண்ணையில் ஊறவைத்துப் பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம். 

காஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக தெரிந்தால் உடனடியாக கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறக்கவும். அடுப்பு, விளக்கு முதலியவற்றை அணைக்க வேண்டும்.சிலிண்டருடன் இணைத்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து காஸ் கசிவதைத் தடுக்கும்.

மாற்று சிலிண்டர் இணைக்கும் போது பூஜை விளக்குகள், ஊதுவத்தி அனைத்தையும் அணைத்து விட வேண்டும். 

அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு சிலிண்டரை மாற்ற வேண்டும். 

அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போது கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருட்கள் அடுப்பை அணைத்து வெளிவரும் எரிவாயுவினால் வாயுக் கசிவு ஏற்ப்பட்டு தீ விபத்து ஏற்படலாம். 

அடுப்பை அணைக்கும் போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடி விட்டு பிறகு அடுப்பின் வால்வை மூடுவது நல்லது.  

ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும் ரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.  




கருத்துகள் இல்லை: